Difference between revisions of "11 நவம்பர் 2006 பத்திரிகை செய்தி"
(Created page with "==<big>வெளியீடு</big>== வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் === நிகழ்வு === '''நிகழ...") |
(No difference)
|
Revision as of 11:02, 5 December 2020
வெளியீடு
வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்
நிகழ்வு
நிகழ்வின் சாரம்: உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்
நாள்: 11 நவம்பர் 2006
தலைப்பு: அந்தரங்கத்தை ஆராயுங்கள்
"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.
11 நவம்பர் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'கல்யாணம் - நட்பு?' எனும் தலைப்பில்... கல்யாணம் என்பது என்ன? ஏன் கல்யாணத்தில் நம்பிக்கை துரோகம் நிகழ்கிறது, நட்பு என்பது என்ன? சிறந்த நண்பனை பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுத் தெளிவை தந்து, சக்திவாய்ந்த புரிந்துணர்வு தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."
11 நவம்பர் 2006
11 நவம்பர் 2006 -பத்திரிகை செய்தி