என் குரு நித்யானந்தர் 08 சாக்ஷி பிரமாணம்

From Kailasapedia
Revision as of 05:40, 30 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)</big>== '''தலைப்பு :'''சாக்ஷி பிரமாணம் '''பெயர் :'''...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : சரவணன்

இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : சரவணன் என்பவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் பெற்ற தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் சென்னையை சேர்ந்தவர். முதல் முறையாக ஸ்வாமிஜியை திருவண்ணாமலையில் தரிசித்துள்ளார். அதிலிருந்து கடந்த பதினைந்து வருடங்களாக ஸ்வாமிஜியின் பக்தராக இருந்து வருகின்றார். தன் வாழ்க்கையில் ஸ்வாமிஜியை தரிசித்த பிறகு மன உளைச்சலில் இருந்து விடுப்பட்டு ஆனந்தமாக வாழ்ந்து வருவதாகவும் தன் தொழிலும் நன்கு நடந்து வருவதாகவும் நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.

சாக்ஷி பிரமாணம்


பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.