மாத இதழ்கள் (தமிழ்) - 2008 ஏப்ரல் நித்யானந்தம்

From Kailasapedia
Revision as of 16:42, 17 December 2020 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "மாத இதழ்கள் (தமிழ்) -2008 ஏப்ரல்-நித்யானந்தம் ==<big>பத்திரிகை பற்றிய வி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

மாத இதழ்கள் (தமிழ்) -2008 ஏப்ரல்-நித்யானந்தம்


பத்திரிகை பற்றிய விவரனை

பத்திரிகை பெயர் :நித்யானந்தம்

இதழ் :மாத இதழ்

வருடம் :2008

மாதம் :ஏப்ரல்

பதிப்பகம் :நித்யானந்தா பதிப்பகம்

பக்கம் :60

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :50,000

பயனடைந்த பக்தர்களின் விபரம் :தமிழ்நாடு ( இந்தியா), கொழும்பு, ரொடண்டோ (கனடா), மலேசியா, சிங்கப்பூர், பீஜீ, ஆஸ்திரேலியா ஆகிய பகுதியில் வாழும் தீட்சை பெற்ற தமிழ் மொழி பேசும் சீடர்கள், பக்தர்களுக்காக வெளியிடப்பட்டது.

மொழி :தமிழ்


இதழில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

" 2008 ஏப்ரல் மாதம் வெளிவந்த 'நித்யானந்தம்' மாத இதழில்... 'முக்தியடைய பரமஹம்ஸர் அளிக்கும் மூன்று யுக்திகள், பரமஹம்ஸரோடு 14 நாட்கள்- காசி-வாரணாசி சுற்றுப்பயணம், இணைய தளம், ஆன்மீகத்தை அழிக்கும் முயற்சியை தடுப்போம், குடல் புண் ஆற்றும் மணத்தக்காளி கீரை, பரமஹம்ஸரின் தமிழ் சிவ சூத்திரம் சொற்பொழிவு, இமயமலை சுற்றுப்பயணம், ஐம்பெரும் விழா அழைப்பிதழ், இந்த மாதத் தியானம், கைப்பிடி கற்களும் காதல் மனைவியும், ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர் தேவஸ்தானம் வழங்கும் புதுப்பிக்கப்பட்ட பூஜை விபரங்கள், பத்தாம் வகுப்பு மாணவனின் வாழ்வில் தியானம் நிகழ்த்திய அதிசயம், நம் மன அமைப்பு, நித்ய ஜோதிடம் - ஏப்ரல் மாதம், உன்னை நீ திருப்தி செய்து கொள், பார்வையற்றவர்களுக்கு பிரெய்ல் புத்தகம், வாருங்கள் விவேகானந்தர்களே! - ஆனந்த பிரம்மச்சரிய பயிற்சி' ஆகிய தலைப்புகளில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் யாவரும் புரிந்துணரும் வண்ணம் அருளிய பிரபஞ்ச சத்தியங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

"


மாத இதழின் நோக்கம்

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம் பரம கருணையால் அருளிய பரம்பொருள் பற்றிய சத்தியங்களை, மோட்ச சாதனமாகிய பரமசிவஞானத்தை அகில உலகம் அனைத்திலும் வாழும் தமிழர்களுக்கு எடுத்து சென்று போதிப்பதே இம்மாத இதழின் நோக்கமாகும்.

இறையனார் அளித்த தமிழ் மொழியை புரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற அனைவருக்கும் பரமசிவனின் அருளால் உயர் உயிர் விழிப்பு (Super Conscious Breakthrough) நிகழ்வதற்கு பொறுப்பெடுத்து இம்மாத இதழ் வெளியிடப்பட்டது.

ஒரு செல் நுண்ணுயிரிலேருந்து மீன் வரை நடைபெற்றது: உடல் வளர்ச்சி. மீனிலிருந்து குரங்கு வரை நடைபெற்றது: உடல் - மன வளர்ச்சி. குரங்கிலிருந்து மனிதன் வரை நடைபெற்றது: உடல் - மன - உணர்வு வளர்ச்சி. இப்போது ரொம்ப நாட்களாகவே மனிதனாகவே இருந்துகொண்டிருக்கறோம். உயிர் தன்னுடைய வளர்ச்சியினுடைய அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. உயிர் தன்னுடைய அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய நேரம் தருணம் வந்துவிட்டது. மனிதனிலிருந்து இறைநிலைக்கு நடக்க வேண்டிய ஆன்ம வளர்ச்சி, ஆன்ம சக்தி வளர்ச்சி நடைபெற வேண்டிய காலம் வந்துவிட்டது. நடைபெற வெண்டிய நேரம் வந்துவிட்டது.

பரமசிவன் நம் எல்லோருக்குள்ளும் அளப்பரிய சக்திகளை வெளிப்படுத்துகின்ற சாத்தியத்தை அமைத்துத்தான் நம்மை அனுப்பியிருக்கின்றார். அந்த சாத்தியங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே இந்த மாத இதழின் தாத்பரியம்.




2008 ஏப்ரல்-நித்யானந்தம்-மாத இதழ்- (2008 April-Nithyanandam-Magazine)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1jCipr7CtEd9535VhpWKZC6KhiM6ZDb1P/view?usp=sharing