என் குரு நித்யானந்தர் 03 சாக்ஷி பிரமாணம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : மா நித்ய ப்ரேம ஸ்வரூபா

இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா

படிப்பு மற்றும் பணி : அரசாங்க வேலை

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : மா நித்ய ப்ரேமஸ்வரூபா என்பவர் சென்னையில் அரசாங்க வேலை பார்ப்பவர். 2009 வருடம் முதல் பகவான் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தராக இருந்து வருகின்றார். ஸ்வாமிஜி நடத்திய பல்வேறு தியான முகாம்களில் அவர் அடைந்த நன்மைகளை பற்றி இக்காணொளியில் பகிர்ந்துள்ளார். முக்கியமாக உறவுகளுடன் அவருக்கு முழுமைதன்மை ஏற்பட்டது என்றும் அவரால் இயன்ற ஆனந்த சேவை செய்யும்பொழுது அவருக்குள் இருக்கும் குறைப்பாடுகளை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதாகவும் அது எவ்வாறு தன்னை உள்ளுலகத்தில் உயர்ந்த நிலைக்கு உயர உதவி புரிகிறது என்பதை நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.

மா நித்ய ப்ரேமஸ்வரூபா என்பவர் சென்னையில் அரசாங்க வேலை பார்ப்பவர். 2009 வருடம் முதல் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தராக இருந்து வருகின்றார். இக்காணொளியில் ஸ்வாமிஜியின் அருளினால் தொலைந்து போன ஒரு பொருள் சற்றும் எதிர்பாராமல் மறுபடியும் கிடைத்ததை நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார்.

சாக்ஷி பிரமாணம்



பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.