என் குரு நித்யானந்தர் 05 சாக்ஷி பிரமாணம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : மா லதா ஈசான சிவ சக்தி

இடம் : மதுரை, தமிழ்நாடு, இந்தியா

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : மா லதா ஈசான சிவசக்தி என்பவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட நன்மைகளை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை தன் வாழ்க்கையில் தரிசிப்பதற்கு முன்பு அவர் வாழ்க்கையே துக்ககரமாகவும் தெளிவில்லாமலும் உடல் நோயினால் அவதியுற்றிருந்ததாகவும் ஸ்வாமிஜியின் தியான முகாம்களில் கலந்து கொண்ட பிறகு வாழ்க்கையே ஆனந்தமயமாக மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் பூஜாசாரியார் தீட்சை பெற்று பல ஹோமங்கள் நடத்தியதாகவும்தான் பெற்ற நன்மை மற்றவர்களும் அடைய வேண்டும் என்பதனால் தான் வசிக்கும் இடத்திலேயே நித்யானந்த மையம் வைத்து நடத்துவதாகவும் பகிர்ந்துள்ளார்

சாக்ஷி பிரமாணம்


பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.