என் குரு நித்யானந்தர் 06 சாக்ஷி பிரமாணம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : சாந்தி

இடம் : அன்னியூர், தமிழ்நாடு, இந்தியா

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : சாந்தி என்பவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து மூன்று மாதங்கள் ரத்தப்போக்கினால் அவர் அவதியுற்ற போது மருத்துவர்கள் புற்றுநோய் என்று கூறியுள்ளனர். பிறகு ஸ்வாமிஜியின் தியான சிகிச்சையின் அருளினால் புற்றுநோயிலிருந்து குணமாகி ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து வருவதாக நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.

சாந்தி என்பவர் 'என் குரு நித்யானந்தர்' என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர்கள் குடும்பத்துக்கே பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் தான் இஷ்ட தெய்வம், குல தெய்வம். ஒருமுறை தன் கணவருக்கு பக்கவாதம் வந்தபொழுது நேரடியாக நித்யானந்த பீடம் பெங்களுருக்கு சென்று ஸ்வாமிஜியிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்துள்ளர்கள். மறுபடியும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பொழுது அவர் கணவரின் மூளையில் இருந்த கட்டி இல்லை என்றும் அவருடைய கணவரும் பக்கவாதத்திலிருந்து குணமடைந்து விட்டார் என்று நன்றிவுணர்வுடன் பகிர்ந்துள்ளார்.

சாக்ஷி பிரமாணம்

பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : என் குரு நித்யானந்தர்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.