ஜனவரி 2003 உலக அமைதிக்கான பங்களிப்பு

From Kailasapedia
Jump to navigation Jump to search

உலக அமைதிக்கான பங்களிப்பு(Contribution for World Peace)

வருடம்  : 2003

நாள் :ஜனவரி 2003

நாட்கள் : தினந்தோறும் நடைபெறும் தியான சிகிச்சை

நிகழ்வு : தியான சிகிச்சை

நிகழ்வின் விபரம் : இலவச தியான சிகிச்சை

பங்கேற்பாளர்களின் விபரம் : பொது மக்கள்

நடைபெற்ற இடம் : ஶீ சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோ, பெங்களூரு

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், பெங்களூரு

நிகழ்வினை நடத்தியவர் : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : ஆயிரக்கணக்கான பொது மக்கள்

நிகழ்வின் விவரனை :

தனிமனிதர் ஒவ்வொருவரும் தங்களது தனி உணர்வை ஆனந்தமான இறையுணர்வாக்கும் சாதனைகள் செய்து வாழ்ந்திட்டால் அமைதி உணர்வு பெறுவர்.தனி மனிதருக்குள் நிகழும் அமைதி உணர்வு மேம்பாடு அடைந்தால், அதுவே உலக அமைதிக்கும் வழிவகுக்கும் என்பதையும் எடுத்துரைத்து, அதற்கான ஞான விழிப்பு நடந்திட சூரிய பகவானை வழிபட வேண்டும் என்பதையும் வழிபடும் தாத்பரியத்தை விளக்கிய செய்தி கட்டுரையாக பகிரப்பட்டது. உலக மக்கள் தியான சிகிச்சை பெற்று, ஆரோக்கியம் அடைந்து இத்தகைய ஆன்மிக சாதனைகளை பயிற்சி செய்வதற்காக இந்தியாவில் பிடதி, பெங்களூரில் 5 கோடி செலவில் கட்டமைப்புகள் 4 வருடங்களில் உருவாக்கப்படும் என்றும், அதற்கான பணிக்கு முன்னாள் பிரதமர் தேவகெளடா அவர்கள் 10 லட்ச ரூபாய் நன்கொடை அளித்தது பற்றியும் பத்திரிகை செய்தியில் பிரசுரம் செய்யப்பட்டது.

2003 வருடம் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் பெங்களூர் ஶீ சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவில் தங்கியிருந்த பொழுது ஆற்றிய சேவைகள் பல பத்திரிகையில் செய்தியாக இடம் பெற்றன. உடல் நலம், மன நலம் மற்றும் ஆன்ம பலம் வேண்டி வந்த அனைவருக்கும் தியானங்கள் கற்றுத் தந்து, தியான சிகிச்சை அளித்து குணமடையச் செய்த சேவைகள் சிறந்த ஆன்மிக சேவையாக அடையாளம் கண்டுணரப்பட்டது. கர்நாடக முதல் மந்திரி திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் மனைவி திருமதி பிரேமா அவர்கள் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தியான சிகிச்சை பெற்று குணமடைந்தார், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குணமடைந்து வருகிறார்கள் என்ற செய்திகள் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன. ஆரம்ப நிலையில் தனக்கென ஒரு ஆஸ்ரமம்கூட கர்நாடக மாநிலத்தில் இல்லாத நேரத்தில் பெங்களூர் நகரத்தில் சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவில் தங்கி மக்களின் துயர் நீங்க பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் ஆற்றிய சேவைகளுக்கான பல ஆதாரங்களுள் இதுவும் ஒன்றாகும்.


இலவச தியான சிகிச்சை


உலக அமைதி-சாஸ்திர பிரமாணம்

உலக அமைதி என்பது ஒவ்வொரு தனிமனிதரும் தன்னைப்பற்றி உணரும் உணர்வு, மற்றவர்களைப்பற்றி உணரும் உணர்வு, உலகைப்பற்றி உணரும் உணர்வுகளில் உன்னதம் நிகழும்பொழுதே சாத்தியம்.

உள்ளுக்குள் எவ்வாறு பார்க்கின்றோமோ, அவ்வாறே புரிந்து கொள்கின்றோம். அதனால் தான் நமது இந்து மதத்தில் இந்த 'பார்த்தல்' என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது... அதில் உன்னதம் நிகழ அனைத்து வகையிலும் வழிகாட்டப்படுகிறது.

ஸமம் ஸர்வேஷூ பூதேஷூ திஷ்டந்தம் பரமேஸ்வரம் |

விநஶ்யத்ஸ்வவிநஶ்யந்தம் ய: பஶ்யதி ஸ பஶ்யதி ||

யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதை பார்க்கிறாரோ, அந்தத் தனி ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்து கொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.

- பகவத்கீதை ( க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் -13.27)

அனைத்தும் பரம்பொருளாக காணும் உள்முகப் பார்வையே இந்து மதத்தில் குருவால் ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளுலக ஞானமாக அருளப்படுகிறது. உள்ளுலக அமைதியே இந்து மதத்தின் அடிப்படை போதனையாகும். உள்ளுலக அமைதியாலேயே உலக அமைதி நிகழும்.

ஓம் ஸஹனாவவது |

ஸஹனெளபுனக்து |

ஶஹவீர்யங்கரவாவஹை |

தேஜஸ்வினாவதீதமஸ்து மாவித்விஷாவஹை: ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

ஓம். நாம் இருவரும் (குரு மற்றும் சீடன்) ஒன்றாக பாதுகாக்கப்படுவோம். நாம் இருவரும் இந்த ஞானத்தால் வளர்க்கப்பட்டு வளப்படுத்தப்படுவோம். நாம் இருவரும் உயர்ந்த ஆன்ம பலம், சக்தி மற்றும் உத்சாகத்துடன் பணிபுரிவோம். கல்வியும் கற்றலும் நம் இருவருக்கும் உயர் ஞானத்தின் ஒளியை அளித்து கூர்மையாக்கட்டும். நாம் இருவரும் நமக்குள் எந்த குறையுணர்வும் எதிர்ப்புத்தன்மையும் அற்று இருப்போம். ஓம் நமது உள்ளத்தில் அமைதி நிலவட்டும். இந்த இயற்கையில் அமைதி நிலவட்டும். இந்த தெய்வீக சக்தி வெளிப்பாடுகளில் அமைதி நிலவட்டும்.

- க்ருஷ்ண யஜூர் வேதம், தைத்ரிய உபநிடதம் 2.2.2

குறையுணர்வுகளை நிறைவு செய்து, சக்திகளை வெளிப்படுத்தி அனைத்திலும் அமைதியை நிகழ்த்தும் குருவின் பங்களிப்பே உலக அமைதிக்கான முதன்மையான பங்களிப்பாகும்

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலகம் முழுவதும் அமைதி நிலவ இந்த ஞானப்பார்வையை அனைவருக்கும் அறிவியலாக கற்றுத் தருகிறார்.

வாழ்க்கையை உச்சமான நேர்மறைத்தன்மையில் வாழ கற்றுத்தரும் தியான முகாம்கள், தியான சொற்பொழிவுகள், யாகங்கள், பூஜைகள் ஆகியவற்றை அளிக்கின்றார். உயர் உயிர் விழிப்புணர்வை வாழும் சாத்தியத்தை அனைவருக்கும் அளிக்கின்றார்.

தொடர்ந்து உலக அமைதிக்காக தன்னலமற்ற சேவை புரியும் பகவானின் செயல்களை பாராட்டி பல உலகத்தலைவர்கள் தங்கள் தலைநகரத்தில் பகவானின் சாந்நித்யம் நிகழ வரவேற்பு அளிக்கின்றனர். பகவானின் சங்கத்திற்கு தொடர் அங்கீகாரம் அளித்து ஊக்கம் அளிக்கின்றனர்.