பிப்ரவரி 2018 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

மானவ கதிர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: பிரபஞ்சத்தின் முதல் தத்துவமான சம்பூர்த்தி பற்றிய கட்டுரை.

நாள் :பிப்ரவரி 2018

தலைப்பு : நீங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த பலனையும் பதிலையும் பெறுவீர்கள்

"மானவ கதிர் என்னும் மாத இதழில் பிப்ரவரி மாதம் 2018 வருடம் ‘நீங்கள் வாழ்க்கையில் எதிர் பார்த்த பலனையும் பதிலையும் பெறுவீர்கள்’ என்ற தலைப்பில் சம்பூர்த்தி பற்றி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.

பிரபஞ்சத்தின் தத்துவங்கள் நான்கு. அதில் முதல் தத்துவமான சம்பூர்த்தியை மேலோட்டமாக பார்த்தால் மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் வார்த்தையை பூர்த்தி செய்வது என்று சமூகம் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. ஆனால் அது மட்டுமின்றி நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகளையும் வாழ்க்கையாக நினைத்து நிஜமாக்குதல் தான் உண்மையான சம்பூர்த்தி தத்துவமாகும். அவ்வாறு நேர்மையான வார்த்தைகளுக்கு தன்னை முழுமையாக்கி கொள்கின்ற சக்தி வர துவங்குகின்றது. அதை 'வாக் சக்தி' என்று கூறுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு வார்த்தையிலும், எண்ணத்திலும் விழிப்புணர்வுடன் கவனம் செலுத்தும் பொழுது நமது வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்த பலனையும் பதிலையும் பெறலாம் என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளியுள்ளார்கள்."

பிப்ரவரி 2018

பிப்ரவரி 2018 -பத்திரிகை செய்தி



வெளியீடு

நமது மித்ரன்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: ஹெச். ராஜாவின் புதிய இயக்க துவக்க விழாவில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்கள் கலந்துக் கொண்டார்கள்.

நாள் :பிப்ரவரி 2018

தலைப்பு : 38635, ஆலயங்களை மீட்போம்

""பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாலர் திரு. ஹெச். ராஜா அவர்கள் சென்னையில் 'இந்து ஆலயங்கள் பாதுகாப்பு இயக்கம்' என்கின்ற புதிய இயக்கத்தை துவங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்கள் கலந்துக் கொண்டனர். இச்செய்தி பிப்ரவரி மாதம் 2018 வருடம் நமது மித்ரன் என்ற தமிழ் மாத இதழில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.""

பிப்ரவரி 2018

பிப்ரவரி 2018 -பத்திரிகை செய்தி