01 பிப்ரவரி 2009 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

திருப்பத்தூர் செய்திகள்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :கல்பதரு: தியான அனுபவ முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம்

நாள் :01 பிப்ரவரி 2009

தலைப்பு : கல்பதரு - ஒருநாள் தியான அனுபவ முகாம் மற்றும் திருப்பத்தூர் நித்யானந்த தியான பீடம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்கள் வேண்டிய வரத்தை கர்ப்பக விருட்சமாக 'கல்பதரு' என்கின்ற ஒரு நாள் தியான அனுபவ முகாமில் வழங்குகின்றார்கள். இந்நிகழச்சியை நிகழ்த்த பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களே நேரடியாக திருப்பத்தூருக்கு வருகை தருகின்றார் என்கின்ற செய்தி திருப்பத்தூர் செய்திகள் என்கின்ற நாளிதழில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி 2009 வருடம் வெளிவந்துள்ளது.

கல்பதரு தியான முகாமானது 20 பிப்ரவரி 2009, காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை திருப்பத்தூரில் உள்ள ஶீ விஜய சரவண மஹாலில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

மற்றும்

திருப்பத்தூர் நித்யானந்த தியான பீடம் இளைஞர் மையம் சார்பில் ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் இலவச மருத்துவ முகாம் ஜனவரி 25 ஆம் தேதி 2009 வருடம் நிகழ்ந்தது. இச்செய்தியை ‘திருப்பத்தூர் செய்திகள்’ என்கின்ற நாளிதழ் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி 2009 வருடம் வெளியிட்டுள்ளது.

பொது மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் பரிமளா செல்வராஜ் அவர்கள் மற்றும் எலும்பு, நரம்பு மருத்துவர் என். லெனின் அவர்கள் மருத்துவம் பார்த்தார்கள்.

இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் பகல் 2 வரை நடைபெற்றது. மருத்துவ பரிசோதனை, மருந்துகள், மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்த இலவச மருத்துவ முகாம் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என்ற தகவல் அறிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர் இ.எல்.ராகவனார் தெருவில் உள்ள பரமஹம்ஸ நித்யானந்த தியானபீடத்தில் காலை, மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை தியான வகுப்புகள், தியான சிகிட்சை இலவசமாக வழங்கப்படுகிறது எனும் தகவல்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது."

01 பிப்ரவரி 2009

01 பிப்ரவரி 2009 -பத்திரிகை செய்தி