01 மார்ச் 2016 தியான முகாம்

From Kailasapedia
Jump to navigation Jump to search

நித்யானந்தம் தியான முகாம் (Meditation Programs)

வருடம்  : 2016

நாள் : 01 மார்ச் 2016

நாட்கள் : பத்து நாட்கள்

நிகழ்வு : தியான முகாம்

பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள்

தியான முகாமின் பெயர் :நித்யானந்தம் தியான முகாம்

நடைபெற்ற இடம் : பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 200

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் நிகழ்த்திய 10 நாள் நடைபெறும் நித்யானந்தம் தியான முகாம் பிடதி ஆதி கைலாஸாவில் நடைபெற்றது. தியான முகாமின் முதல் நாள் அன்று பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பகவான் தீட்சை அளித்தார்.


நித்யானந்தம் தியான முகாம்




தியானமுகாம்கள்_சாஸ்திர பிரமாணம்

"நமது சாஸ்திரங்கள் குருவின் உபதேசம் பெறும் ஒவ்வொரு ஜீவர்களும் பெறும் நன்மைகளை, மேன்மைகளை மிக அழகாக விளக்கியுள்ளது.

அறிவினோ டொன்றிநிற்குந் தமத்தொடு விகார மாங்கே

அறிவினிற் கலக்கு மென்று மணைந்துட னிற்கு மாகி

லறிவினுக் கநந்த கோடி கற்பம்வந் திறந்திட்டாலும்

பிறிவதற் காகு முத்தி யில்லையே பேசி லென்றும்

ஆத்மாவினோடு பொருந்தியிருக்கும் ( அறியாமையெனும்) தமசின் விகாரமானது, ஆத்மாவுடன் சம்பந்திக்கு மாயின், ( எப்போதும் கலந்து கூடவேயிருக்குமாயின்), அனந்த கோடி கல்பங்கள் உண்டாகி நாசமாயினும் ஆத்மாவிற்கு, அவ்வறியாமையினின்றும் வேறுபடுவது எனப்படும் மோக்ஷம் சொல்லில் கூட எக்காலத்தும் இல்லை. - ஆதாரம்: சாங்கிய யோகம், ஈஸ்வர கீதை ( கூர்ம புராணத்தில் உள்ளது)

கோடி கல்பங்களாக தொடரும் அஞ்ஞானத்தை அழித்து ஆத்ம ஞானத்தை நேரடியாக அருள்பவர் 'குரு' என்று குருகீதையில் பரமசிவனார் சொல்கின்றார்.

கூடாவித்யா ஜகந்மாயா தேஹஶ்சாஜ்ஞாத-ஸம்பவ:|

விஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந குரு-சப்தேந கத்யதே ||

ஜகத் காரணமாகிய மாயை, தேஹ காரணமான அவித்தை - இவ்விரண்டனுக்கும் மறைந்திருக்கும் அஞ்ஞானமே பிறப்பிடம். எவரது அருளால் ஒருவருக்கு நேரடியாக ஆன்மஞான அனுபவம் கிட்டுகிறதோ, அவரே குரு எனப்படுகிறார். - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலக மக்களின் சர்வ துக்கத்திற்கும் காரணமாய் உள்ள அஞ்ஞானத்தை அழிக்கும்பொருட்டு குருவாய் வீற்றிருந்து நேரடியாக ஆத்ம ஞான உபதேசம் அளிக்கின்றார்.

தியாக முகாம்களில் தாமே நேரடியாக தீட்சை அளித்து, பரமசிவ ஞானத்தை உபதேசம் செய்கின்றார். தனிநபருக்குள் நிகழும் உணர்வு மாற்றங்களால் அவர்களது துக்கம், வன்முறை குறைந்து அமைதியும், ஆனந்தமும் பெருகுகிறது. இது உலகிற்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தருகிறது.

"