16 நவம்பர் 2018 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

குடும்ப நாவல்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: எதுவாக உங்களை உணர்கின்றீர்களோ அதையே வெளிப்படுத்துவீர்கள் என்பதை பற்றி விளக்கும் கட்டுரை

நாள் :16 நவம்பர் 2018

தலைப்பு : வேத ஆகமங்களின் சாரம்: 2 நீங்கள் எல்லோரும் சக்தியின் வெளிப்பாடுகளே!

"குடும்ப நாவல் என்ற மாதம் இருமுறை வெளிவரும் இதழில் நவம்பர் 16 2018 வருடம் ‘வேத ஆகமங்களின் சாரம்: 2 - நீங்கள் எல்லோரும் சக்தியின் வெளிப்பாடுகளே! ” என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி இருந்தது.

நாம் நம்மை பற்றி என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம் மற்றும் வாழ்க்கையாக்குகின்றோம். நாம் நம்மை உடலாகவோ, மனமாகவோ அல்லது தூய உணர்வாகவோ நினைத்து இயங்குகின்றோம். அதை பொறுத்தே நாம் முன்மாதிரியாக பின்பற்ற விரும்பும் நபர், வாழ்க்கை முறை, கொள்கைகளை தேர்ந்தெடுப்போம் மற்றும் தெய்விகத்தன்மைகளையும் வெளிப்படுத்துவோம். நம் வாழ்க்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம் கருனையினால் தெய்விக அனுபவத்தை அளித்து அதை ஒருவருக்குள் பதிவு செய்யும் நிகழ்விற்கு ‘தீட்சை’ என்று பெயர். பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளித்த தீட்சையின் ஆற்றலால் தீட்சை பெற்ற சீடர்கள் மூன்றாம் கண் விழிப்படைந்து பல சக்திகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

தெய்விகத் தன்மைகளையும் சக்திகளையும் வெளிப்படுத்தி வாழும் அனைவரும் சக்தியின் வெளிப்பாடுகளே! என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளினார்கள். "

16 நவம்பர் 2018

16 நவம்பர் 2018 -பத்திரிகை செய்தி