18 மே 2018 பத்திரிகை செய்தி

From Kailasapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

நெற்றிக்கண்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: காமிக ஆகமத்தில் இருந்து சில சத்தியங்கள்

நாள் :18 மே 2018

தலைப்பு : ஒரு ஜீவன் அடைய விரும்புவதும் அடையப்பட வேண்டியதும.

"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழில் 11 மே 2018 அன்று 'ஒரு ஜீவன் அடைய விரும்புவதும், அடையப்பட வேண்டியதும்' என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். ஒரு ஜீவன் அடைய விரும்புவதற்கும் அடையப்பட வேண்டியதற்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியை பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட இக் கட்டுரையின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜீவன் தன்னை எவ்வாறு உணருகின்றதோ அவ்வாறே அதன் குறிக்கோளையும் நிர்மாணம் செய்கின்றது. வறியவனாக உங்கள் இருப்பை நீங்கள் உணர்ந்தீர்களானால் செல்வத்தை நோக்கி உங்கள் சக்தி செயல்படும். தன்னை வறியவனாய் உணராதவனுக்கு உலகமே உடமை. தன்னை வறியவனாய் உணர்ந்தவனுக்கு இவ்வுலகில் உரிமை இல்லை. உடமை என்பது கடமைக்காக மட்டுமே எடுத்து கொள்ளப்படும் உரிமை. உரிமை என்பது தன் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் அசுரத்தனமான உடைமை என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்த கட்டுரையில் அருளினார்கள். "

18 மே 2018

18 மே 2018 -பத்திரிகை செய்தி