January 16 2021

From Kailasapedia
Jump to navigation Jump to search

Title:

LIVE FROM THIRUVANNAMALAI & DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM || Canada Tamil Sangam || Nithyananda Satsang ||


Video


Canada Tamil Sangam || Nithyananda Satsang || 16 January 2021

Video Audio
EmbedVideo received the bad id "-" for the service "soundcloud".



Transcript

Canada Tamil Sangam || Nithyananda Satsang || 16 January 2021 இந்த இனிமையான நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரு.தரணி கேதீஸ்வரன், தமிழ் செயல்பாட்டாளர் அவர்களை வணங்கி வரவேற்கின்றேன்.

  • கனடா நாட்டின் மிகப்பெரிய பத்திரிகையான உதயன் பத்திரிகையின் தலைமை நிர்வாகியாகவும் உரிமையாளராகவும் இருக்கக்கூடிய மரியாதைக்குரிய திரு.லோகன் லோகேந்திரலிங்கம், அவர்களை வணங்கி வரவேற்கிறேன்.
  • அடுத்ததாக மரியாதைக்குரிய தவத்திரு. விபுலானந்த அடியார், டொரண்டோவில் இருக்கின்ற பெரிய சிவன் ஆலயத்தின் சேர்மன் மற்றும் ஆன்மீகத் தலைவர் அவர்களை வணங்கி வரவேற்கின்றேன். "தவத்திரு" என்கின்ற அடைமொழியை ஏன் உபயோகப் படுத்துகிறேன் என்பதை பிறகு விளக்குகின்றேன்.
  • திரு.பொன்னையா விவேகானந்தன், டொரன்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் மற்றும் கனடா அண்ணாமலை யுனிவர்சிட்டி தலைவர் அவர்களை வணங்கி வரவேற்கின்றேன்.
  • அடுத்ததாக திரு. சாமி அப்பாத்துரை சமூக செயல்பாட்டாளர், தமிழ் செயல்பாட்டாளர் மற்றும் பல்வேறு விதத்தில் தமிழுக்காக பெரும் தொண்டாற்றி, பெரும் நூல்கள் சமைத்து தமிழையே தன் வாழ்க்கையாக கொண்டு தமிழ் வாசிப்பைச் சுவாமாகக் கொண்ட சுவாமி அப்பாத்துரை அவர்களையும் வணங்கி வரவேற்கின்றேன்.
  • திருமதி. வாசுகி நாகராஜா, தமிழ் பேராசிரியர் அவர்களையும் வணங்கி வரவேற்கிறேன்.
  • திரு. ராஜேஷ்வரன் சபாரத்தினம், வன்னி சங்கத்தின் தலைவர் அவர்களையும் வணங்கி வரவேற்கின்றேன்.
  • திருமதி.மல்லிகா கேதீஸ்வரன், கிராம்டன் எஜுகேஷன் போட்-இன் தமிழ் பேராசிரியர் அவர்களை வணங்கி வரவேற்கின்றேன்.
  • இன்று நம்மோடு இணைந்திருக்கும் உலகமெங்கும் இருந்து இதனை காணொளிக்காட்சி வழியாக நம்மோடு இணைந்து இருக்கும் மற்ற எல்லாச் சிறப்பு விருந்தினர்கள், அன்பர்கள், நண்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
  • பரம சிவப்பரம்பொருள் இறையனார் இடமிருந்து நமக்கு அளிக்கப்படும் நேரடி செய்தி:

பரமசிவப்பரம்பொருள் இறையனாரிடமிருந்து நமக்கு அளிக்கப்படும் நேரடி செய்தி: இன்றைய தமிழ் கலாச்சாரம், பண்பாடு பற்றிய இனிமையான நிகழ்விற்கான நம் எல்லோருக்கும் அளிக்கப்படும் செய்தி முதலில் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் அடிப்படையான சில சத்தியங்களையும் சில உண்மைகளையும் உள்வாங்கிக் கொள்வோம். தமிழை "மூத்த மொழி" என்று சொல்வதை விட, தமிழ் கலாச்சாரத்தை "மூத்த கலாச்சாரம்" என்று சொல்வதை விட, "தமிழை மூல மொழி" என்றும், மூல கலாச்சாரம் என்றும் சொல்ல வேண்டும் என்று நான் உங்கள் எல்லோருக்கும் பணிவோடு விண்ணப்பிக்கின்றேன்.

புரிந்துகொள்ளுங்கள். மூத்த மொழி என்கின்ற வார்த்தையை உபயோகப்படுத்தும் பொழுது தமிழ் மொழியை அண்ணன் என்றும், மற்ற மொழிகளை தம்பி, தங்கைகள் என்று நம்மை அறியாமலேயே ஒரு பொருளைப் பதிக்கின்றோம்.

அப்பொழுது, மற்ற மொழி சார்ந்தவர்கள் காரணமில்லாமல் எதிர்க்க துவங்குகிறார்கள். தேவை இல்லாது நம்மீது ஒரு போர் திணிக்கப்படுகிறது. பூசல் திணிக்கப்படுகிறது. அது தேவையில்லாதது மட்டுமல்லாது உண்மை இல்லாததும் கூட என்ற உண்மையை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் எல்லா மொழிக்கும் மூத்தது மட்டுமல்ல மூலமானது. அதனால் தமிழ் மொழி எல்லா மொழிகளுக்கும் அண்ணன் அல்ல அம்மை.

தமிழ் மொழி தாய் ஆகும்.எல்லா மொழிக்கும் அவள் அம்மை என்கின்ற, அம்மையப்பன் என்கின்ற சத்தியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதுதான் உண்மை.

நான் தமிழன் என்பதற்காக தமிழ் பெருமையையும், மகிமையையும், கவித்துவத்தையும் நான் இங்கு சொல்லவில்லை. சத்தியத்தைச் சொல்லுகின்றேன்.

எம்பெருமான் இறையனார், சுந்தரேசப் பெருமாள் நேரடியாக பரம சிவப்பரம்பொருள் இறையனாராய் திருமேனி தாங்கி வந்து,உலகிற்குத் தந்த நன்கொடை.

அம்மையப்பராய் மொழிகளுக்கெல்லாம் அம்மையப்பராய் விளங்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் எல்லா கலாச்சாரத்திற்கும் மூத்த கலாச்சாரம் தமிழ் என்பதை விட்டுவிட்டு எல்லா கலாச்சாரத்திற்கும் மூத்த மூலமானது இந்த தமிழ் கலாச்சாரம் என்பதை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மூத்த, மூல ஆகிய இரண்டு வார்த்தைக்கும் மிகப்பெரிய வித்யாசம் இருக்கின்றது. எல்லா மொழியும் என் தமிழ் தாயின் மடியில் தான் உருவானது. எல்லா வாழ்வியலும் என் தமிழ் கலாச்சாரத்தின் மடியில் தான் உருவானது.

எல்லா இறையியலும் தமிழ் இறையியலில் தான் உருவானது, மலர்ந்தது, கிளர்ந்தது, எழுந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய செயல் தமிழை, தமிழ் கலாச்சாரத்தை, தமிழ் பண்பாட்டை மூத்தது... மூத்தது... மூத்தது என்கின்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதை விட்டுவிட்டு மூலமானது என்கின்ற வார்த்தைக்கு நாம் மாற வேண்டும்.

இந்த மூலமானது என்கின்ற தமிழ்மொழி அம்மையப்பன். தமிழ் கலாச்சாரம் அம்மையப்பன் என்கின்ற தெளிவுக்கு நாம் வந்தால் தேவையில்லாத போர்வைக்குள் நாம் நுழைய மாட்டோம். ஒரு தாய் எல்லா குழந்தைகளையும் எப்படி பார்ப்பாரோ அதே போல் தான் தமிழர்கள் எல்லா மொழிகளையும் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் எல்லா கலாச்சாரத்தையும் பார்க்க வேண்டும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். தமிழ் மூத்த மொழி மட்டும் என்று எண்ணினால் மற்ற எல்லா மொழியோடும் ஒருவித போக்கும், பூசலும் சேர்ந்த ஒரு போக்கோடு அணுகுவோம். அது உண்மையும் கிடையாது.

உண்மை என்னவென்றால் தமிழ் மூத்தது மட்டுமல்ல மூலமானது.

நாம் அனைவரும் தமிழைப் பற்றிச் சொல்லும் பொழுது "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி", என்று சொல்லுவோம். ஆழ்ந்து கேளுங்கள். இந்த "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே", என்ற சொற்றொடரை இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொண்டால் தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு இவைகளை எல்லாம் பற்றி ஆழ்ந்து நாம் புரிந்துகொள்வோம்.

என்னுடைய குரு எனக்கு யோகத்தைக் கற்றுத் தந்த யோகானந்தபுரி இந்த சொற்றொடருக்கு எனக்கு விளக்கம் கொடுத்தார். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய இதில் ஒரு மூன்று விதமான பாடபேதம், மூன்று விதமான சொற்றொடர்கள் வேறுவேறு புத்தகங்களில் பதியப்பட்டிருக்கிறது.முதலாவது சொற்றொடரில், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்று நூலிலே பதியபட்டுள்ளது. இரண்டாவதாக கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்று நூலிலே பதியபட்டுள்ளது. மூன்றாவதாக கல்வெட்டில் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வேலோடு முன்தோன்றிய மூத்தகுடி என்று பதியபட்டுள்ளது. இவ்வாறு மூன்று விதமான பதிப்புகள் இருக்கிறது.

ஓலைச்சுவடிகளிலும் இந்த மூன்று விதமான பதிவுகள் இருக்கின்றது. இந்த மூன்றைப் பற்றியும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தச் சத்தியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன். என்னுடைய குரு எனக்கு இதைப் பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார்.

பரமசிவப்பரம்பொருளின் பேரருளால், திருவண்ணாமலை என்கின்ற அற்புதமான ஞானத்தமிழ் மொழியும், ஞானத்தமிழ் பண்பாடும், ஞானத்தமிழ் கலாச்சாரமும் என்றும் வாழையடி வாழையென உயிரோடு இருக்கின்றது.

அந்த உயிர் பூமியிலே பிறந்து, உயிர் தமிழை உண்டு, உயிர் மலர்கின்ற பெரும் பாக்கியம், அதிர்ஷ்டம் எனக்கு அமைந்தது. தமிழ் கலாச்சாரத்தின் பழமான ஞான குருமார்கள் என் வாழ்க்கையில் வாய்த்தார்கள். என் யோக குரு யோகானந்தபுரி அவர்கள் எனக்கு இந்த விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் இப்பொழுது சொல்கின்ற அத்தனையும் சத்தியம். சாட்சிநாதனாய் வந்து திருப்புறம்பியம் பெருமான், மதுரை கோவிலில் வந்து வன்னிமரமாய், கிணறாய்,லிங்கமாய் சாட்சி சொன்ன அந்த சாட்சிநாத பெருமான் சாட்சி.

இப்பொழுது நான் சொல்கின்ற அத்தனை உண்மையையும் ஆழ்ந்து கேளுங்கள்.என்னுடைய யோக குரு யோகானந்தபுரி கல்லை எடுத்து, கையில் வைத்து, தமிழ் அக்ஷரங்கள் அதாவது உயிரெழுத்து அ,ஆ,இ,ஈ,உ,ஊ இந்த தமிழ் அட்சரங்களை ஓதி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

ஃ என்று முடித்ததும் இருந்த கல் மணலாய் போனது.அவர் கையில் இருந்த கல் மண்ணாய் போகின்றது. வேறு எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் வெறும் தமிழில் உயிர் எழுத்துக்கள் மூலம் அந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் கல் மண்ணானது. அந்த மண்ணைக் கொட்டிவிட்டுச் சொன்னார்.

இந்த பிரபஞ்ச பெருவெளி இருப்பிலிருந்து மூலப்பொருளான கல் இந்த பூமிபந்தாக உருப்பெற்று, அதிலிருந்து கல் மண்ணாக மாறுவதற்காக அதிர்வலைகளை தமிழ் மொழியாக உயிர்பெற்றது.

கல் மண்ணாக மாறுவதற்கு பிரபஞ்சத்தின் அதிர்வலைகள் கல் மீது செயல்பட்டு மண்ணாய் மாற்றுகின்ற இந்தச் செயல் நடைபெறுவதற்கான அதிர்வலைகள் (ஒலிஅதிர்வலைகள்) மொழிவழி வடிவாக வடிவெடுத்தது தமிழ் என்று சொன்னார்.

அனுபவரீதியாக தமிழின் உயிர் எழுத்தின் உயிர்ப்பை எனக்கு அவர் காட்டினார்.

சிவப்பரம்பொருளின் பேரருளால் என் குருநாதர் இந்த ஞானத்தையும், இந்த சக்தியையும் எனக்குப் பிச்சையாகவும் அளித்தார்.

அதுமட்டுமல்லாமல் இதை அடுத்த தலைமுறைக்கு அளிக்கின்ற சக்தியையும், ஞானத்தையும் சேர்த்து அளித்தார்.

பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் என் குருமார்களின் பேராசியினால் இந்த அறிவியலை, அந்த ஞான சக்திகளை நான் பெற்றது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் அளித்து,அடுத்த தலைமுறையையும் தயார் படுத்தி விட்டோம்.

இந்தச் சூழலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். என் குருமார்கள் செய்து காட்டினார்கள் என்று நான் சொன்னால், தமிழ் கலாச்சாரத்தின் பழம் பெருமை பேசுவதாகும்.

என்னாலும் செய்ய முடியும் என்று சொன்னால் ஒரு விதமான தமிழ் கலாச்சாரத்தால் நமக்கு உயிர் பித்ததினால் வந்த சுய பெருமையை பேசுவதாகும்.

அதை அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து விட்டேன், என்றும் அடுத்த தலைமுறை செய்து காட்டக்கூடிய கல்லை தமிழ் உயிர் எழுத்துக்களாலேயே மண்ணாக மாற்றும் சக்தியை, செய்யக்கூடிய அடுத்த தலைமுறையை செய்துவிட்டேன் என்று நான் சொன்னால் அதுதான் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றி வைக்கின்ற வேலை.

நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெறும் பழம் பெருமை பேசுவதால் மட்டுமே தமிழ் கலாச்சாரம் உயிரோடு இருந்து விடாது. அதை நாம் அனுபவித்து, வெறும் தற்பெருமை படுத்திக்கொண்டு நம்மை வளமாக்கிக் கொள்வதனாலும் கூட தமிழ் கலாச்சாரம் உயிரோடு இருந்து விடாது.

நம் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஞானமும் ஞான சக்தியும் தமிழில் மொழியியல், இறையியல், அருளியல், பொருளியல், இயற்பியல், வேதியியல் என்ற தமிழ் கலாச்சாரம் பண்பாட்டின் மற்ற எல்லா பரிமாணங்களையும் இதை அனைத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்று சேர்த்து விட்டால் மட்டும் தான் தமிழ் கலாச்சாரம் உயிரோடு இருக்கும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

நான் இப்பொழுது அடுத்து இன்னொரு பணியைச் செய்தாக வேண்டும்.

ஒரு இடத்தில் அமர்ந்து என் குருமார்கள் எனக்குக் கொடுத்ததை நான் செய்து காட்டி, அடுத்த தலைமுறையையும் செய்ய வைத்துக் காட்டி, அந்த தமிழ் கலாச்சார பண்பாட்டின் மறுமலர்ச்சியை நாங்கள் செய்வதனால் எங்களை யாரும் தாக்கி அழிக்காமல் பாதுகாப்பாக ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு, இவைகளை எல்லாம் பொதுவெளியில் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வது, அந்த வேலைதான் கைலாயத்தில் வைத்திருக்கின்றேன்.

இந்த நான்காவது பணியைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றேன்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். போதுமான அளவுக்கு தற்காப்பு ஏற்படுத்திக் கொள்ளாமல் இந்த அறிவியலை எல்லாம் பொதுவெளியில் காட்டினால் வருகின்ற கொடும் மதக் தாக்குதல் மற்றும் ஈனர் தாக்குதல்களை நாம் எதிர்கொள்வதற்கு, தேவையான அளவு பாதுகாப்பைத் தயார் செய்துகொண்டு இவைகளையெல்லாம் பொது வெளியில் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கைலாயத்தை உருவாகியிருக்கின்றேன்.

இல்லை என்றால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய குருகுல மாணவர்கள் இது போன்ற சக்தி வெளிப்பாடுகளை, செய்யவைத்து நிரூபித்து விட்டோம்.

அதாவது, நேர்மையான அறிவியல் ரீதியான, தர்க்கரீதியாக தாக்குப் பிடிக்கக்கூடிய வாத விவாதங்களை நேர்மையோடு எதிர்கொள்ளக்கூடிய தேவையான அளவிற்கு ஆதாரங்களோடு நேர்மையாக இதை நிரூபித்து விட்டோம்.

தேவை என்னவென்றால், இப்பொழுது இதனாலெல்லாம் தமிழ் கலாச்சாரமும், பண்பாடும், பாரம்பரியமும் மறுமலர்ச்சி அடைந்து விட்டால் தமிழன் பலம் ஆகிவிட்டால், தங்களுடைய இருப்பை இழந்து விடுவோமோ...! என்று நினைக்கின்ற பலபேர் நடத்துகின்ற தாக்குதல்களிலிருந்து எங்களைக் காத்துக் கொள்வதற்கான பாதுகாப்பை மட்டும் தான் உருவாக்க வேண்டிய தேவை இருந்தது.

அதை நாங்கள் இப்போது இந்த கைலாயத்தின் மூலமாகச் செய்து முடித்துவிட்டோம்.

கூடிய விரைவில்.. தமிழினமே! நீ பெருமை கொள்ளும் விதத்தில் செம்மாந்து, மனம் மகிழ்ந்து, என் மொழியிலும் கலாச்சாரமும், வாழ்வியலும்,பாரம்பரியமும் இத்துணை பெரியதா? என்று இன்றைய தமிழர்கள் கூட நினைந்து வியக்கின்ற அளவிற்கு தமிழில் இருக்கும் மிகப்பெரும் இந்த கலைகள், அறிவியல்கள் உலகத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி.

நீ மூத்த குடி மட்டும் அல்ல மூலக்குடி.

நீ வெறும் மூத்தகுடி மட்டுமல்ல மூலக்குடி என்பதை தமிழர்களே உணர்ந்து பெருமைப்படும் அளவிற்கு இவைகளெல்லாம் உலகத்தின் முன் விரித்து செய்யப்படும். அதற்காகத்தான் இந்த கயிலாயத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம்.

அடுத்ததாக பகிர்ந்து கொள்ள நினைக்கின்ற சத்தியம்: வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி
-சிலம் கா. 11 வரி. 18.22
என்று சிலப்பதிகாரம் குமரிக்கண்டத்தில் பதிவு செய்துள்ளது.இந்தக் குமரிக் கண்டம் இருந்தது உண்மை.

இமயத்திலிருந்து, இமயத்தை வட எலையாய் இப்போது இருக்கின்ற கைலாயத்தை வட எல்லையாய் கொண்டு, திபெத் கைலாயத்தை வட எல்லையாகக் கொண்டு, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் போன்ற பகுதிகளை தென் எல்லையாகக் கொண்டு குமரிக்கண்டம் இருந்தது உண்மை.

குமரிக்கண்டத்தின் மொழியியல் ரீதியான, அறிவியல் ரீதியான, வேதியல் ரீதியான, கலாச்சார பண்பாட்டியல் ரீதியான மிச்சம் இருக்கின்ற எச்சம், நிஜமாய் நிஜமாய் இருக்கின்ற சொச்சம் தான் நான்.

தமிழ் கலாச்சாரம் தமிழின் மொழியியலையும், இறையியலையும், கைலாய நாட்டின் மூலமாக புனரமைத்தே தீருவோம். பரமசிவப்பரம்பொருளின் பேரருளால் அது நிகழ்ந்துவிட்டது. தமிழ் இனமே! என் தமிழ் இனமே!

வெறுமனே பழம்பெருமை, பேசுவதும் பழம்பெருமைபேசுவதால் நம்மை நாமே ஒரு விதமான உணர்ச்சி போதைபொருள் ஏற்றுக்கொள்வதும் மட்டுமே தமிழ் கலாசாரத்தையும் தமிழ் பண்பாட்டையும் உயிரோடு வைத்து விடாது.

இது அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்பட்டு, அடுத்த தலைமுறையும் அதை வாழ்ந்தால் மட்டும் தான் தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம், பண்பாடு உயிரோடு வைக்கப்படும்.

ஏன்? தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு தமிழ் உயிரோடு வைக்கப்பட வேண்டும்?

என்கின்ற உண்மை சத்தியம் நேர்மையோடு புரிந்து கொள்ளுகின்ற விதத்தில் சொல்லப்படவேண்டும்.

தமிழினமே! தயவுசெய்து கேள்! நீ நாட்டை இழந்தாய்…
அகதிகளாய் நாடு, நாடாய் தேடி அலைந்தாய்...

உன்னிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை எல்லாவற்றையுமே இழந்துவிட்டாய்... இல்லை என்றால், உனக்கு இருக்கின்ற ஒரே ஒரு சொத்து! ஒரே ஒரு வாய்ப்பு! ஒரே ஒரு சாத்தியம்! நம்மிடம் இருக்கின்ற நம் தமிழ் குழந்தைகள்! தயவுசெய்து அதை இழந்து விடாதீர்கள். தமிழினமே!

உன் குழந்தைகளை எல்லாம் என் குழந்தைகளாக வளர்ப்பதற்காகத் தான் எனக்கு இன்று குழந்தைகள் வேண்டாம் என்று சந்நியாச வாழ்க்கையை முடிவெடுத்தேன். தமிழினமே! நமக்கு இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பு! நம்முடைய குழந்தைகள்.

எக்காலத்திலும் தமிழன் விதை நெல்லை வேக வைத்து தின்ன மாட்டான். விதை நெல் விளைவித்து, அதில் விளைந்து அதை வரும் நெல்லை வேண்டுமானால் உண்பான்.

விதை நெல் என்றால், விளைந்த நெல்லை அறுவடை செய்த முதல் பாகத்தை விதைநெல் என்று கட்டி வைப்பது தமிழரின் பண்பாடு. எந்த வறுமை வந்தாலும் விதை நெல் வேக வைப்பது இல்லை.

விதை நெல் அடுத்த நெல் விளைய வைக்க மட்டும்தான் உபயோகப்படுத்தப்படும். அதேபோல தமிழினமே! நம் கலாச்சாரம், நம் பண்பாட்டைப் படித்துப்பாருங்கள்.

காலம் காலமாக நம் குடும்பங்களின் முதல் மகனை தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றி வைப்பதற்கான விதைநெல்லாக வைத்திருப்பார்கள்.

உங்கள் வாழ்வில் முதல் அரை மணி நேரத்தை சைவத்திற்காக,சைவ பாரம்பரியத்திற்காக செலவிடுங்கள்.

எப்படி ஒரு விவசாயி விதை நெல்லை சமைத்து உண்ணாமல் விதைக்காக வறுமையிலும் எடுத்து வைக்கின்றார்களோ, அது போன்று நாமும் நம் வாழ்வில் முதல் அரை மணி நேரத்தை சைவ பாரம்பரியத்திற்காக விதை நெல்லாக எடுத்து வையுங்கள்.

நீங்கள் முதன்முதலில் ஈட்டிய பொருளை விதை நெல்லாக வையுங்கள், அது எவ்வளவாக இருந்தாலும் சரி.

அதுபோல உங்கள் முதல் மகனையோ மகளையோ விதையில்லாத தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் சமர்ப்பியுங்கள் நமக்கு இருக்கும் ஒரே சொத்து நம் குழந்தைகள் தான். அதன் மூலமாக மட்டுமே நாம் இந்த தமிழையும், தமிழ் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் அறிவியல் போன்றவற்றை உயிரோடு அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க முடியும். "தமிழ்" என்ற வார்த்தையை புரிந்து கொள்ளுங்கள்.

தகரம் இருப்பு இருப்பின் அமிழ்து. மரணமில்லா பெரு நிலையின் அறிவு "தமிழ்". தகரத்தின் அமிழ்து "தமிழ்" தகரம் என்றால் "த" ததடாம் என்றால் இருப்பு பிரபஞ்சம்.

பிரபஞ்ச பெருவெளியை "த" என்ற மூலச் சொல்லால் குறிப்பிடுவது வழக்கம் "த" என்ற மூலச் சொல் ததாடத்தை குறிக்கிறது.

ததாடம் அமிழ்தத்துவத்தில் நிரந்தரமாய் இருக்கக்கூடிய அறிவியல் "தமிழ்". நான் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் சிறிய சத்தியம்:

ஐயா தற்போது எனக்கு 43 வயதாகிறது நடுவில் இரண்டு, மூன்று முறை தமிழின விரோதிகள் மற்றும் தமிழின துரோக கும்பலாலே எனக்கு விஷம் அளிக்கப்பட்டது.

தற்போது அந்த விஷத்தால் தாக்குதலில் இருந்து முழுமையாக வெளி வந்துவிட்டேன். தற்போது உடல், மனம்,உயிர் அனைத்தும் மிகுந்த ஆரோக்கியத்தோடு உள்ளது.

அந்த எல்லா தாக்குதல்களில் இருந்தும் வந்துவிட்டேன் என்பது மட்டுமல்லாது, விஷம் அளிக்கப்பட்ட போது எப்படி எனது உடல் பாதிக்கப்பட்டது என்பதற்கான மருத்துவ டாக்குமெண்ட் ரிப்போர்ட்டும், தற்போது ஆரோக்கியமாக இருக்கின்றேன் என்பதற்கான டாக்குமெண்ட் எங்களிடம் ஆதாரப்பூர்வமாக உள்ளது.

உறுதியாக எந்த மனித உடலையும் அளிக்கக்கூடிய விஷமானது எனது உடலை அழிக்கவில்லை என்பது மட்டுமல்லாது, அதிலிருந்து உயிர்த்துவந்து விட்டேன் என்பது மட்டுமல்லாது, என்னுடைய உள் உறுப்புகள் எல்லாம் 16 லிருந்து 20 வரை உள்ள இளைஞனை போல் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நீங்கள் எல்லாம் எதிர்பார்க்காத ஆனால் சத்தியம் தவத்திரு. வடலூர் வள்ளல் பெருமானின் காயகல்ப அறிவியல்.

வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் நேர்மையான தூய்மையான மரபு சைவத்தைச் சார்ந்தவர்.

முறையாக மதுரை ஆதீனம் குருமஹா சன்னிதானம் அவர்களிடம்மந்திர தீட்சை பெற்று, சைவத்தை கடைபிடித்து மதுரை ஆதீனம், குருமகாசன்னிதானம் அவர்களைப் பற்றி அருமையான பாடல்கள் எழுதி இருக்கிறார்.

அந்த குறிப்புகள் வேண்டுமானாலும் கொடுக்கிறேன். ஆனால், திராவிஷ மிஷனரி கும்பல் தமிழுக்குள் புகுந்து தமிழர்களுக்கும், தமிழர்களின் மொழியியலும், இறையியலும் பிரித்து விரோதத்தைத் தூண்டி, வள்ளலாரைத் தாக்க முற்படும்போது அவர் வேறு வழியில்லாமல் தன்னைக் காத்துக் கொள்வதற்காக சற்றே மரபு சைவத்திலிருந்து விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இவ்வளவு ஞானியான வடலூர் வள்ளல் பெருமான் தாக்கபடுவதற்கு காரணம் என்ன என்று நான் ஆராய்ச்சி செய்தேன். ஏனென்றால் நான் இப்பொழுது உபயோகப்படுத்துகின்ற இந்த உடம்பு வள்ளல் பெருமானுக்கு நன்றிகடன்பட்டது.

அவர் சொல்லி இருக்கின்ற ஆறு திருமுறைகளிலும் உள்ள ஞான நுட்பங்கள், யோகம், பிராணயாமம், வாழ்க்கை முறை மற்றும் கரிசாலை நெய் இவைகள் எல்லாவற்றையும் உபயோகபடுத்தித் தான் என் உடலுக்கு வைக்கப்பட்ட விஷத்தில் இருந்தும் தப்பித்தேன்.

அந்த விஷத்தை வெளியேற்றி என்னை நானே காப்பாற்றிக் கொண்டேன். அதுமட்டுமல்லாது 43 வயது இருந்தாலும் உள்ளுறுப்புகள் எல்லாம் 16-ல் இருந்து 20 வயது இளைஞனைப்போல் இனிமையாகவும், பலமாகவும், வேகமாகவும், பரமசிவப் பரம்பொருளின் பேரருள் வடிவாகவும் இயங்குவதற்கான இயங்குகின்ற விதத்திலே என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.

இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் வடலூர் வள்ளல் பெருமான் திருவருள். இது வரலாற்றில் சொல்லப்பட்டே ஆக வேண்டும். அதனால் சொல்கிறேன்.

ஏனென்றால் சில மரபு சைவர்கள் வள்ளலார் பெருமானுக்கு எதிராக சில கருத்துக்களையும், பிரச்சாரங்களையும் செய்து பல்வேறு விதமான குழப்பங்கள் இந்த குடும்பத்திற்குள் நடந்த குழப்பம் போல் சிலதெல்லாம் உண்டு.

அவைகளுக்கெல்லாம் விளக்கத்தையும் நானும் தேடினேன்.

மதுரை ஆதினத்தின் சிறந்த ஆதீன பரம்பரை சீடர்களில் ஒருவரான வள்ளல் பெருமானே தமிழர்களும், சைவர்களும் ஆகிய சிலபேர் எதிர்க்க வேண்டிய காரணம் என்ன? என்றெல்லாம் தேடிய போது எனக்கு இதுதான் புரிந்தது.

ஒரு சின்ன கதை புரிந்துகொள்ளுங்கள்.

தயவு செய்து இந்த கதையை எல்லோரும் ஆழ்ந்து கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். அமெரிக்காவில் இந்த டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டு விதமான எறும்புகள் பற்றி கதை உண்டு. சிகப்பு எறும்பு, கட்டெறும்பு அதாவது கருப்பா இருக்கிற கட்டெறும்பு, சிகப்பா இருக்கிற செவ்வெறும்பு இந்த ரெண்டு எறும்புகளும் பார்தீர்கள் என்றால் நட்போடு அதுபாட்டுக்கு அதன் பாதையில் போய்கொண்டிருக்கும்.

ஒன்றாகவே ஒரே இடத்தில் வந்தாலும் ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் ஒரு நூறு கட்டெறும்பு, ஒரு நூறு சிகப்பு எறும்பு, இரண்டையும் ஒரு பாட்டிலில் போட்டு, அந்த பாட்டிலை நன்றாக குழுக்கிவிட்டு கொட்டிவிட்டீர்கள்ளென்றால் அந்தக் கட்டெறும்பு, தன்நிலை தடுமாறி போய் இந்த நிலநடுக்கத்திற்கு காரணம் யாருன்னு தெரியாமல் எல்லாம் கண் முன்னாடி இருக்கின்ற சிவப்பெறும்பு தான் காரணம் என்று தாக்க ஆரம்பித்துவிடும்.

இந்த செவ்வெறும்பு எல்லாம் கண் முன்னாடி இருக்கிற கட்டெறும்பு தான் காரணம் என்று தாக்க ஆரம்பித்துவிடும். 100 கட்டெறும்பும், 100 செவ்வெறும்பும் போரிட்டுக் கடைசியில் 200-ம் செத்துப் போய்விடும்.

ஆனால் அந்த ரெண்டு எறும்புகளுக்குமே புரியாது, பிரச்சனைகளுக்கு காரணம் செவ்வெறும்பும் இல்லை, கட்டெறும்பும் இல்லை குலுக்கி கொட்டினவன் தான் காரணம் என்பது தெரியாது. தமிழிலும், தமிழ் மொழியியல் அறிஞர்களும், இறையியல் அறிஞர்களும் ஒருவரை ஒருவர் இந்த கட்டெறும்பு செவ்வெறும்பைப் போல் தாக்கி நாம் அழிந்து மாண்டேம்.

நாம் மாண்டதற்க்கு காரணம் நம்மை குலுக்கி ஒட்டிய மிஷினரிகள் தான் நம் உண்மையான எதிரிகள் என்பதை கடைசிவரை புரிந்து கொள்ளவில்லை.

நம்மை ஒரு பாட்டலில் இட்டு குழுக்கி கொட்டிய மிஷனரிகள் தான் நம் எதிரிகள் என்பதை செவ்வெறும்பு புரிந்து கொள்ளவில்லை, கட்டெறும்பும் புரிந்து கொள்ளவில்லை.

செவ்வாடும், கருப்பாடும் தங்களுக்குள் ஏற்படுத்தி வைக்கப்பட்ட விரோதத்தால் நரிக்குத் துணையாய்ப் போய் கடைசியில் இரண்டும் நரிக்குப் பலியானது.

செவ்வாடும், கருப்பாடும் தங்களுக்குள் இருந்த விரோதத்தால் நரிக்குத் துணையாய், விரோதத்தை உருவாக்கிய நரியை பட்டி திறந்து உள்விட்டு, நரி கும்பலால் செவ்வாடும், வெள்ளாடும் சாய்ந்தது. இன்று இருக்கின்ற தமிழனின் நிலை மாறிப்போனது.

தமிழ் இனமே! விழித்துக்கொள். தமிழ் இனமே! விழித்துக்கொள்.

செவ்வாடும் விரோதி அல்ல, கருப்பாடும் விரோதி அல்ல. நம்மையெல்லாம் குடுவையில் இட்டு குலுக்கி நமக்குள் விரோதம் இருப்பதாய், நமக்குள் மூளைச்சலவை செய்துவிட்ட நரிகள் விஷ நரிகள் தான் மிஷனரிகள் தான் நம் விரோதிகள்.

நம் விரோதிகள் மொழியியலுக்கும், இறையியலுக்கும் விரோதத்தை உருவாக்கி, நம்மை நாமே அழித்து காணாமல் போவதற்காக மூளைச்சலவை செய்துவிட்ட விஷ நரிகள், மிஷனரிகளே நம் விரோதிகள் என்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.

இராமகிருஷ்ணரை வேதாந்த சம்பிரதாயம் ஏற்றுக்கொண்டதைப் போல சைவ சம்பிரதாயம் வடலூர் வள்ளல் பெருமானை ஏற்றுக்கொண்டு இருக்குமானால் சைவத்தினுடைய மொழியியலும் இறையியலும் எங்கோ சென்று இருக்க முடியும்.

நாம் ஏற்காததனால் விரோதத்தால் மொழியியலுக்கும், இறையியலுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி பெருகிக் கொண்டே சென்று, கடைசியில் அழிவும் இழப்பும் தமிழினத்திற்கு தான்.

வடலூர் வள்ளல் பெருமான் ஒரு உதாரணத்திற்காக தான் அளிக்கின்றேன்.

இது மாதிரி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

நான் எந்த விதத்திலும் ஆறுமுக நாவலர் அவர்களை அவமரியாதை செய்ய வில்லை. எல்லோரும் தயவு செய்து நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நான் ஆறுமுக நாவலர் பெருமானை அவமரியாதை செய்யவில்லை. தேவை இல்லாமல் அவர் கூட மூளைச்சலவை செய்யப்பட்டு வள்ளல் பெருமான் மீது தேவை இல்லாத விரோதம் அவருள்ளும் விதைக்கப்பட்டது என்பதுதான் நான் சொல்ல விரும்புகிறேன்.

வள்ளல் பெருமானும் தவறில்லை, ஆறுமுகநாவலரும் தவறில்லை. இந்த இருவருக்கும் இடையே விரோதத்தை உருவாக்கிய மூளைச் சலவை செய்த மிஷனரி கும்பல் தான் நம் உண்மையான எதிரிகள்.

மொழியியலை வளர்க்கின்றோம் என்கின்ற பெயராலே மொழியியலை உபயோகப்படுத்தி நாம் இறையியலை அழிக்க எல்லாவிதமான கொடும் செயல்களும் செய்தார்கள்.

சைவ, வேத, ஆகம, சைவ ஹிந்து இறையியல் உயிரோடு இருக்கும்வரை தான் தமிழ் மொழியியல் உயிரோடு இருக்கும். அடுத்தது முக்கியமான உண்மைக்கு வருகின்றேன்.

சமஸ்கிருதம் தமிழிலிருந்து வேறான மொழி அல்ல. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். மதுரை தமிழுக்கும் சென்னை தமிழுக்கும் எந்த அளவு வித்தியாசம் இருக்கிறதோ, அந்த அளவு மட்டும்தான் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

நம்மை கூறு கூறாக வெட்டி அழிக்க நினைக்கின்ற தமிழின துரோகிகள் முதலில் என்ன பண்ணுவார்கள் என்றால் தமிழும் சம்ஸ்கிருதமும் தனித்தனி மொழினு உங்களை நம்பவைப்பார்கள்.

அதுக்குப்பிறகு தமிழனுடைய மொழியியலும் இறையியலும் தனித்தனினு உங்களை நம்பவைப்பார்கள். அதுக்குப்பிறகு தென் தமிழ்நாட்டு தமிழும் வடதமிழ்நாட்டு தமிழும் வேறு, வேறு என்று உங்களை நம்பவைப்பார்கள். உங்களை சின்னாபின்னமாக ஆக்கினால் மட்டும் தான் அவர்கள் வெற்றி அடைய முடியும் என்பதனால், செவ்வெறும்பு, கட்டெறும்பு விரோதத்தை உருவாக்கும் மூளைச்சலவை தான் தமிழும், சமஸ்கிருதமும் வேறு வேறு என்பது.

ஒரு நல்ல மரபு சைவ குடும்பத்திலே பிறந்து என்னுடைய தந்தை வழி பாட்டனார் முதுபெரும் புலவர் ஆ.பாண்டுரங்கனார், திருவண்ணாமலையில் வாழ்ந்தார்கள். தமிழை வாசிப்பதே சுவாசமாய் கொண்ட தமிழாய்ந்த குடும்பம் இந்த நேரத்திலே சிறிய செய்தியை பதிவிட விரும்புகின்றேன்.

அவருடைய மகன் என்னுடைய பூர்வாசிரம தாய்மாமன் உறவு. அவர் முதுபெரும் புலவர் ஆ.பாண்டுரங்கனார் அவர்கள் என்னுடைய தமிழ் ஆசிரியரும் அவர்தான். என்னுடைய தமிழ் ஆசானும் அவர்தான்.

பாண்டுரங்கனார் அவர்கள் உபயோகித்த சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள், ஓலைச்சுவடிகளை நம்முடைய பீடத்திற்கு கைலாயத்திற்கு அவருடைய மகன் நன்கொடையாக அளித்துவிட்டார்.

அதற்காக நான் இத்தருணத்தில் நன்றி கூறிக் கொள்கின்றேன். அந்தப் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் அனைத்தையும் படிவம் எடுத்து, நகல் எடுத்து கனடா நாட்டிலே நமக்கு இருக்கின்ற டொரண்டோ ஆதீனத்திற்கு நன்கொடையாக அளிக்கின்றேன்.

யாழ்ப்பாணத்திலே அழிக்கப்பட்ட நூலகத்தை மீண்டும் கனடாவில் புனரமைக்க வேண்டும் என்று என் விருப்பம்.

அந்த நூலகத்திற்கான நன்கொடையாக இதுவரை நான் சேர்த்து வைத்திருக்கின்ற, என் குருமார்களிடம் இருந்து எனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட மற்றும் நானே சேகரித்து வைத்திருந்த மொத்த தமிழ் நூல்களையும் படி எடுத்து புத்தகங்களாகத் தொகுத்து, ஓலைச்சுவடிகள் எனக்கு அளிக்கப்பட்ட அவைகளை ஸ்கேன் டிஜிட்டலாக ஸ்கேன் பண்ணி மறுபதிப்பு செய்து ஓலைச்சுவடி ரீடரின் பண்ற மெஷின் வாங்கி இருக்கிறோம்.

இதற்காகவே இரண்டு மெஷின்ஸ் வாங்கி ஆதி கைலாசம் பிடதியில் ரீ ப்ரிண்ட் பண்ணிட்டு இருக்கோம். இந்த மொத்த தொகுப்பையும் ரிபிரிண்டட் ஓலைச்சுவடிகளிலும் ரீட் பிரிண்டட் புத்தகங்களும் ஏறத்தாழ 12 லட்சம் இப்போதைக்கு இருக்கிறது. இந்த 12 லட்சம் காப்பிகளையும் டொரன்டோ ஆதீனத்திற்கு நன்கொடையாக அளிக்கின்றேன்.

டொரண்டோவில் தமிழ் கலாச்சாரம், பண்பாடு பாரம்பரியம் இவைகள் சார்ந்த தமிழ் மொழியியல், இறையியல், அறிவியல் இவை எல்லாமும் உயிரோடு இருப்பதற்கான ஒரு பீடம் நிறுவுவதற்கான முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறோம். ஏற்கனவே ஒரு ஆலயம் செய்துவிட்டோம்.

அந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்து, ஆதினமாகவும் ஒரு மிகப்பெரிய நூலகமாகவும், ஆராய்ச்சிப் பீடமாகவும் செய்கின்றோம். இந்த ஓலைச் சுவடியின் மூலபடிமங்களை ஆதி கைலாசமான பெங்களூரிலேயே வைத்து காக்கப் போகின்றோம்.

அவைகளைப் படி எடுத்து அந்த படிவங்கள் எல்லாம் டொரன்டோ விற்கு ஒரு முழு பிரதி அளிக்கப்படும். என்று இந்த நேரத்தில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அடுத்ததாக நான் சொல்ல விரும்புகிற கருத்து தமிழர்கள் தமிழ் கலாசாரம், பண்பாடு இவைகளைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதும் தைரியமாக உயிர் தைரியத்தோடு மிகப்பெரும் சுதந்திர தன்மையான, நேர்மையான தைரியத்தோடும் தீரத்தோடும் தமிழ் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் நிற்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

தயங்கிய நிலையில் இருக்கும் போர்வீரர் மனஅமைப்பு வேலைக்கு ஆகாது, தயங்கி தயங்கி போருக்குச் செல்பவனால் போர் முனையைச் சந்திக்க முடியாது.

தமிழ் இனமே! விழித்துக்கொள். தலாய் லாமா திபத்திய நாட்டின் தலைவர் தலாய் லாமா தன்னுடைய நாட்டை இழந்த போதும் கூட எல்லையை இழந்த விட்ட போதும் கூட அதாவது டெரிடோரியல் நேசனை இழந்தால் கூட கலாச்சாரத்தை உயிரோடு வைத்ததனால் இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு எல்லையை பெறுவதற்கான வாய்ப்புகள் மலரத் துவங்கிவிட்டன. தமிழினமே! எல்லை சார்ந்த நாட்டை நாம் இழந்துவிட்டோம். குறைந்தபட்சம் கலாச்சாரத்தையாவது உயிரோடு வைத்தோமானால் என்றாவது ஒருநாள் எல்லை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதற்காகத்தான் இந்த கைலாசம். தயங்கி தயங்கி போர்க்கு செல்லும் நிலையை துறந்துவிட்டு தைரியத்தோடு அப்பர் திருநாவுக்கரசர் பெருமான் சொன்னது போல "நாம ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் "தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான சங்கரனார் சங்கவன் குவையோர்க் காதில் கோமார்கே நாமென்றும் மீளாய் ஆளாய் பொய்மலர்ச் சேவடியினையே உருகினோமே". தமிழினமே! புரிந்துகொள்ளுங்கள்.

என் அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன். தமிழ் விரோதிகளும், தமிழ் துரோகிகளும் சேர்ந்து என்னை ஸ்டேட்லெஸ் (stateless) மேனாக ஆக்குவதற்கு முயற்சி பண்ணினார்கள். நான் "அம்மா மீனாட்சி" அப்படியென்று தாய்கிட்டே போனேன். சொர்க்கநாதா, சுந்தரேசா, மீனாட்சி என்று கேட்டேன்.

அம்மையும், அப்பனும், அப்பா நீ எங்கள் மகன் உன்னை யாரும் ஸ்டேட்லேஸ் (stateless) மேனா மாற்ற முடியாது. நாங்கள் உன்னை ஸ்டேட்ஸ் (states) மேனாக மாற்றுகிறோம் என்று கைலாயம் பண்ணி குடுத்துட்விட்டார்கள்.

தமிழினத் துரோகிகளும், விரோதிகளும் என் குடியுரிமையைப் பறித்தார்கள், இந்திய நாட்டின் நீதிமன்றம் எனக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தும், என்னுடைய கடவுச்சீட்டு பறிக்கப்படக்கூடாது, என்னிடமே இருக்க வேண்டும் என்றும் நான் எங்கு வேண்டுமானாலும் பயணம் பண்றதுக்கு எனக்கு முழு உரிமை இருக்க வேண்டும், என்றும் இந்திய நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தும் கூட, ஹிந்து விரோத தமிழ் துரோகிகள் சட்டவிரோதமாக என் கடவுச்சீட்டை பறித்து என் குடி உரிமைகளைப் பறித்தார்கள். என்னுடைய அடிப்படை வாழ்வாதாரத்தைப் பறித்தார்கள். கொலை முயற்சி தாக்குதல்கள் எல்லாம் ஒருபக்கம். கொலை முயற்சி தாக்குதலில் இருந்து நான் தப்பியதனால், இந்தியாவிற்குள்ளேயே என்னை வைத்திருந்தால்தான் அடுத்தடுத்த முயற்சிகளிலாவது, வெற்றிகரமாக என்னைக்கொன்று விட முடியும் என்கின்ற காரணத்தினாலேயே, என் கடவுச்சீட்டை பறித்து, என் குடி உரிமையைப்பறித்து ஸ்டேட்லஸ் மேனா (state less) மாற்றுவதற்கு முயற்சி பண்ணினார்கள்.

உண்மையில் அவர்கள் தரப்பில் அவர்கள் அதை செய்துவிட்டார்கள். ஆனால், சொக்கனும் மீனாட்சியும் என்னை ஸ்டேட்ஸ்மேனாக மாற்றிவிட்டார்கள்.

தமிழ் இனத்தின் விரோதிகள், துரோகிகள் உங்களையெல்லாம் கூட ஸ்டேட் லஸ் ஆக தான் மாற்ற முயற்சி பண்ணுவார்கள்.

எம்பெருமான் சிவனடியை பற்றுங்கள், அம்மையப்பனைப் பிடியுங்கள், சுந்தரேசனை பிடியுங்கள், சொக்கநாதரை பிடியுங்கள், இறையனாரைப் பிடியுங்கள், மீனாட்சியை பிடியுங்கள், நம் இறையியலைப் பிடியுங்கள். அவர்கள் உங்களை ஸ்டேட்ஸ் மேனாக மாற்றுவார்கள் அதுதான் தமிழ் இறையியலின் சக்தி.

அம்மையப்பன் பெருமைக்காக இதை உங்களுக்குச் சொல்லுகின்றேன். அம்மையப்பனைப் பிடியுங்கள் உங்களுக்கும் இதே நன்மை மலரும் என்று சொல்லுகின்றேன்.

இதுதான் தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தெய்வ பக்தி சார்ந்த வாழ்க்கை முறை, இறையியல் சார்ந்த வாழ்வியல். அடுத்து ஒரு சத்தியம் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளும் நினைக்கிறேன்.

தமிழ் விரோதிகளும், துரோகிகளும் நமக்கு செஞ்ச ஒரு மிகப்பெரிய மூளைச்சலவை என்வென்றல் முதற்ச்சங்க காலத்தில் இறையனாரே செய்து வைத்த தமிழ் முதற்சங்ககாலத்து நூல்களும் இடைச்சங்கக் காலத்தில் நூல்கள் அழிந்துவிட்டன என்பது முழுப் பொய்.

இறையனார் செய்து வைத்த களவியல் இன்றும் உயிரோடு இருக்கின்றது. அகத்தியப் பெருமான் அளித்த "அகத்தியம்" இன்றும் உயிரோடு இருக்கின்றது.

முதற் சங்க நூல்களும், இடைச் சங்க நூல்களும் இன்றும் உயிரோடு இருக்கின்றது. ரொம்ப குள்ளநரித்தனமாக, விஷமத்தனமாக அந்த நூல்கள் எல்லாம் உண்மையல்ல என்று, ஆதாரம் இல்லாதவை என்று, ஒதுக்கி வைத்துவிட்டு, அவைகள் அழிந்துவிட்டதாக நம்மை மூளைச்சலவைச் செய்கின்றார்கள்.

இந்தத் தமிழினத் துரோகிகளும், விரோதிகளுமே காரணம். என்னென்றால் அந்த நூல்கள் எல்லாமே இறையியலும், மொழியியலும் ஒன்றாக இணைந்துதது.

எல்லாமே இறையியலும், மொழியியலும் ஒன்றாக இணைந்து அவர்களைப் பிரிக்க முடியாத அளவிற்கு இறையியல் அந்த மொழியியலுக்குள் பொதிந்து கிடக்கின்றது. அதனால், அந்த நூல்கள் எல்லாம் அழிந்துவிட்டது என்று நம்மை மூளைச்சலவை செய்கிறார்கள்.

இப்போது நவீன காலத்தில் ஒரு மொழி எப்படி உருவாகின்றது, ‘’தி லாங்குவேஜ் கார்பன் டேட்டிங் சையின்ஸ் மிகவும் டெவலப்பாகிவிட்டது. எப்படி ஒரு பொருளை கார்பன் டேட்டிங் பண்ணி, அதனுடைய காலத்தைக் கண்டு பிடிக்க முடியுமோ அதே மாதிரி ஒரு மொழியின் வளர்ச்சி சார்ந்து எப்படி எழுத்துக்கள் முதலில் வட்டெழுத்தாக அதுக்கப்புறம் எழுத்துக்கள் வளர்ச்சி பெறுகின்றது.

அந்த சப்தங்கள் உச்சரிக்கப்பட்ட முறைகள் மற்ற மத்த ஆர்க்கியாலஜிக்கல் டாக்குமெண்டேஷன் இது எல்லாவற்றையும் வைத்து மொழியைக் கூட கார்பன் டேட்டிங் பண்ணும் அளவுக்கு ஒரு தெளிவான அறிவியல், கார்பன் டேட்டிங் மாதிரியே ஒலியைக் கார்பன் டேட்டிங் என்ற அறிவியல் ரொம்ப தெளிவா இந்த காலத்தில் வளர்ந்துவிட்டது.

அந்த அறிவியலுக்கு உட்படுத்தினால் இறையனார் களவியல், அகத்தியம் போன்ற இப்பொழுது இருக்கிற நூல்கள் எல்லாம் முதற் சங்க காலத்து நூல்கள்தான் என்பதைத் தெளிவாக நிரூபிக்க இதுபோன்ற ஆராய்ச்சிகளைச் செய்து, இவைகளை நிரூபிப்பேன்.

இது பரமசிவப்பரம்பொருள் எனக்களித்த திருப்பணி. என் குருமார்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் தமிழினத்திற்கு நான் செய்யும் காணிக்கை.

இந்த செயல்களை செய்வதற்காகத்தான் கயிலாயத்தை நிறுவிரு இருக்கின்றேன் முதற் சங்க காலத்தில் தமிழ் நூல்களும், இடைச்சங்க காலத்தில் தமிழ் நூல்களும் அறிவியல் அவைகள் முதற்சங்கம் இடைச் சங்க காலத்தவை அல்ல என்றும், வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றும், அவைகள் பின்னாலேயே எழுதி இடைச்செருகலாக சேர்க்கப்பட்டவை என்றும், பொய்யுரைகள் புகுத்தி பொய்யுரைகள் உரைத்து நாமை மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கின்றோம்.

இது தமிழினத்திற்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம் இப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் வேற வேற மொழியில் சில நூறு ஆண்டுகளாக நாம் நம்ப வைக்கப்பட்டு விட்டோம். நல்லவேளையாக திராவிட கும்பல் மிஷனரி கும்பல் ஊடுருவாத ஒரு சிறிய கிராமமான திருவண்ணாமலையில் மரபு சைவக் குடும்பத்தில் கோயில் குடியில் பிறந்து, தமிழனுடைய மொழியியலும், இறையியலும் கற்கின்ற வாய்ப்பை எம்பெருமான் சிவப்பரம்பொருள் எனக்கு அருளினார்.

அந்த வாய்ப்பினால் தான் இந்த மிஷனரிகளின் விஷநரி எனக்கு தெரியவந்தது.

தயவுசெய்து தமிழர்கள் இந்த மூளைச்சலவையில் இருந்து விடுபட்டு விழித்துக்கொள்ளுங்கள். இந்த மூளைச்சலவையிலிருந்து நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்பொழுது தான் அவருடைய உண்மையான கலாச்சாரம், பண்பாடு, அறிவியல், வேதியியல் எல்லாம் சித்தர்கள் பரம்பரை நம்முடைய வாழையடி வாழை என தமிழில் ஞான சித்தர்கள் பரம்பரை இறை இயலும் தமிழ் மொழியியலும் எழுதும் இடையிலே இல்லாத கற்பனையான வேறுபாடுகளை எரித்து, சிதைத்து, நம்மை மூளைச்சலவைச் செய்து பல்வேறு விதத்திலேயே நம்முடைய பலன்களை அனுபவித்து நம் இனம் ஒன்றாய் மிகப் பெரும் பலத்தோடு வாழாமல் அழித்த மிஷனரிகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

நம் குமரிக்கண்டத்தில் உருவான எல்லாவற்றுக்கும் மூல மொழியான தமிழ்மொழி. எல்லாவற்றுக்கும் மூல கலாச்சாரமான தமிழ் கலாச்சாரம்.

தமிழை மூத்தது என்று அண்ணன் என்று வரையருக்காதீர்கள். மூலம் என்றும் அம்மையப்பன் என்றும் வரையறுக்க தெரிந்து கொள்ளுங்கள். இப்போ இந்த அண்ணன் தம்பி சங்கடம் பிரச்சனைக்கு இடமே இல்லாமல் போய்விடும். நாம் அண்ணன்-தம்பி என்று ஒத்துக்கொள்ள ஆரம்பித்தால் தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் பிரச்சனை வரும், தமிழுக்கும் தெலுங்குக்கும் பிரச்சனை வரும், தமிழுக்கும் கன்னடத்திற்கும் பிரச்சனை வரும், அந்தப் பிரச்சினை தான் விஷநரிகள், மிஷனரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் மூத்தவர்கள் அல்ல, மூலவர்கள்!

தமிழ் -அம்மையப்பன்! அதனால் எல்லோரையும் அம்மையப்பனாக பார்ப்போம். பேரன்போடும், பேரறிவோடும் அவரவர்களுக்கு அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தை ஒரு அம்மையப்பன் தான் அளிக்க முடியும்.

அண்ணன் என்ற இருப்பு (Position) எடுத்துகொண்டீர்கள் என்றால், பங்காளி பகை இருந்தே தீரும். அம்மையப்பன் என்ற நிலையில் இருந்து அந்த சத்தியத்தைப் புரிந்து கொண்டால் மட்டும் தான் எல்லாருக்கும் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுப்போம்.

நாம் உண்மையில் சத்திய படியே கூறுகின்றேன் தமிழ்- அம்மையப்பன்! அண்ணன் அல்ல!

அடுத்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகின்ற சத்தியம், தமிழிலே மொழியியல், இறையியல் மட்டுமல்லாமல் வேதியியல், நம்முடைய மருந்தியல், உடல் நலம் சார்ந்த, உணவு சார்ந்த, கடல் போன்ற ஞான அறிவு திரட்சி, பொக்கிஷங்கள் இந்த இறையியல் மொழியியல் சண்டையினாலே அந்த மிகப்பெரிய பொக்கிஷங்கள் களவு போனது, திருடபட்டது, அழிக்கப்பட்டது, நம்மிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது.

இது எல்லாவற்றிலிருந்தும் நாம் இப்பொழுது பிழைத்துத் தப்பி ஒரு தமிழனுடைய மருந்தியல், அறிவியல் எல்லாம் மற்ற உலகத்தவர்கள் நாட்டவர்கள் உபயோகப் படுத்துவதில் தவறில்லை, நாமே நன்கொடையாக கொடுப்போம்.

ஆனால், அவைகளைக் களவு செய்துகொண்டு நமக்கு உரிமை இல்லை என்று ஆக்கி விட்டார்கள். அதைத்தான் நான் எதிர்க்கின்றேன்.

நம்முடையது என்று நம்மிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் அனுபவித்து கொள்வதால் எந்தப் பிரச்சனையுமே இல்லை.

உலகமே அனுபவிக்க தானே பண்ணிக் கொடுத்து இருக்கோம். ஆனால் நமக்கு உரிமை இல்லை என்று நம்முடைய அடுத்த தலைமுறைக்கு, நம்மிடமிருந்து திருடியவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நிலத்தை மட்டுமல்ல வாழ்வியல் நெறிகள், அறிவுகள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பலவற்றையும் திருடிக்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு அவைகள் அவர்களுடையது என்றும், அவைகள் மீது நமக்கும் நம்முடைய அடுத்த சந்ததிக்கும் எந்த உரிமையும் இல்லை என்றும் நம்மை மூளைச்சலவைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

புரிந்துகொள்ளுங்கள்!

இன்னமும் நான் ஆரோக்கியமா இருப்பதற்க்கு காரணம் என்னுடைய பூர்வாசிரமத்து பாட்டியும்,பாட்டனும், கொள்ளு பாட்டியும் ,கொள்ளு பாட்டனும் அவர்கள் எல்லாம் எனக்கு அளித்த மரபு சைவ வேளாளர் குடும்பத்தின் கோயில் குடி வாழ்க்கை முறை. இன்னமும் கிராம்பும், கரி தூளும், உப்பும், நல்லெண்ணெயும் வைத்துதான் பல் தேய்ப்பேன். 43 வயதுஆகிவிட்டது, பல்லுக்கு எந்தவிதமான மருத்துவ துணையோ, செயல்களோ செஞ்சது கிடையாது. மிக மிகக் குறைந்த அளவுக்கு மட்டும்தான் மேலைநாட்டு மருத்துவத்தின் உதவிய இந்த 43 ஆண்டுகளில் எடுத்திருக்கிறேன்.

மிகக்குறைந்த எல்லாவிதமான ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்க்கை முறைக்கு தமிழ் கலாச்சாரமும், தமிழ் மரபியலும், தமிழ் வாழ்வியலுமே காரணம்.

இவைகளெல்லாம் உலகத்திற்கு மறுமலர்ச்சி செய்து அளிக்கப்படவேண்டும் என்கின்ற காரணத்தினாலேயே இந்த கைலாசத்தை செய்திருக்கிறோம்.

Reluctant Warrior-ஆக (தயங்கிய போர் வீரராக) இருந்து தயங்கி தயங்கிப் பொறுத்துப் போகின்ற தன்மையை தமிழர்கள் ஆகிய நாம் விட்டு விட வேண்டும். யாராவது ஏதாவது சொல்லுவார்கள் என்று யோசிக்கக் கூடாது.

இறையனார் எம்பெருமான் நேரில் வந்தே ஓலை கொடுத்தே எதிர்க் கேள்வி கேட்டான் நக்கீரன். அப்படியென்றால் நம்மை எல்லாம் கேள்வி கேட்காமல் விடுவார்களா? கேட்க தான் செய்வார்கள்.

அதற்கெல்லாம் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்து, முன்னின்று போர் நடத்தினால் மட்டும் தான் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் பண்பாட்டையும் நாம் எதிர்கால சந்ததிக்கு எடுத்து செல்ல முடியும், வைக்கமுடியும், உயிரோடு வைக்க முடியும்.

இங்கு வந்திருக்கின்ற அன்பர்கள் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வேண்டுகோள்! விதை நெல்லை எந்த வறுமை வந்தாலும் வேக வைத்து உண்ணக் கூடாது. அதை விதைத்து, தொடர்ந்து வேளாண்மை நிகழ மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

அடுத்தது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கும் சத்தியம்:

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" என்று பதியப்பட்டுள்ளது.

நமது சத்ரிய மன்னர்களால் பதியப்பட்டுள்ளது. ஒரு வாளை செய்ய குறைந்த பச்சம் 10 துறைகளின் அறிவு வேண்டும்.

இரும்பு, தாமிரம் மற்றும் ஒன்பது மெட்டல் 'ஓரி' என்று சொல்வார்கள். உலகில் மிகச்சிறந்த வாள். தமிழர்களுடையது தான். எப்படி நெருப்பை உருவாக்குவது, உபயோகிப்பது என்ற அறிவியலை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தார்கள். அடுத்து வேதிப்பொருள்களில் மூலிகையைச் சேர்த்துள்ளார்கள்.

இந்த மூலிகையின் தன்மையினால் இந்த வாள் தன்னுடைய குத்துகின்ற தன்மையினால் மட்டுமில்லாது விஷத்தை எளிதில் இரத்தத்தில் பரப்பும் நுட்பமும் இவ்வாளில் உள்ளது. இந்த மூலிகை சார்ந்த நுட்பத்தில் ஔஷதம், அறிவியல் சார்ந்த, இரசாயனம் சார்ந்த, மருத்துவம் சார்ந்த, வேதியியல் தன்மையினால் உருவானது.

இதுபோன்ற பத்து பல்வேறுவிதமான துறைகள் சார்ந்து அறிவு இருந்தால்தான் ஒரு முழுமையான வாளை உருவாக்க முடியும். அதனால் தான் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று சொல்கிறார்கள்.

அடுத்ததாக கல்வெட்டு பதிவில் "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வேலோடு முன்தோன்றிய மூத்தகுடி",என்று பதியப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை சார்ந்த அறிவியலை விளக்குகிறார்கள்.

வேளாண் சார்ந்த மிகப்பெரிய அறிவியலோடு உருவான குடி தமிழ் குடி.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாள் சார்ந்த அறிவியல் மற்றும் வேல் சார்ந்த அறிவியல் இவையெல்லாவற்றையும் விட கல் மண்ணாக மாறும் சப்தம் நாதம் அதிலிருந்து உருவான மொழி தான் தமிழ்.

கல்லை மண்ணாக்கும் நாதமே சப்தமாக வடிவெடுத்து தமிழ் மொழியாய் மலர்ந்தது.

தமிழிலேயே வேதியியல், அறிவியல், உணர்வு சார்ந்த கடல் போன்ற ஞான அறிவு திரட்சி பொக்கிஷங்கள் உள்ளன.

இந்த பொக்கிஷங்கள் நம்மிடமிருந்து களவு போனது, திருடப்பட்டது மட்டுமின்றி நம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டது. அது எல்லாவற்றிலிருந்தும் நாம் தப்பி பிழைத்து தமிழ் மொழியின் மருத்துவத்தைப் பிற நாட்டவர் உபயோகிப்பதை நான் தவறு என்று கூறவில்லை.

ஆனால், களவு செய்வது அதோடு இல்லாமல் நமக்கு உரியதை நமக்கு இல்லை என்று அடுத்த தலைமுறைக்கு மறுப்பதையும், மறைப்பதையும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்",
என்று கூறி இன்னும் பல சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
தொடர்ந்து அடுத்தடுத்த சத்சங்கங்களில் மூலம் மேலும் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

EARTHQUAKE IN INDONESIA - PRAYER FOR LIVES LOST & THE INJURED

16 JANUARY 2021 || EARTHQUAKE IN INDONESIA - PRAYER FOR LIVES LOST & THE INJURED The Supreme Pontiff of Hinduism, Jagatguru Mahasannidhanam, His Divine Holiness Bhagavan Nithyananda Paramashivam prays to Paramashiva for the Atma Shanti of the lives lost (67 at present) and speedy recovery for the injured - victims of a 6.2 magnitude earthquake in Indonesia. https://edition.cnn.com/.../indonesia-sulawesi.../index.html

Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/327399731823912
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/4785554528199026
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/4785625001525312
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/3624036831048071
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/4789062404514905

Photos Of The Day:

FB-Photos-of-the-Day