June 14 2021

From Kailasapedia
Jump to navigation Jump to search

Title

Narration

Video

Transcript

14 JUNE 2021 (IST) MONDAY - DEVI PARASHAKTI AKASHIK READING ENGLISH AND TAMIL SCRIPT

10:44 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

10:56 PM - 12:41 AM (OF 15TH JUNE) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACTS FROM TODAY’S READING COMMON BLESSINGS

  • OM OM OM OM OM OM
  • I THE SOURCE OF THE OMKARA, FROM WHICH THIS WHOLE UNIVERSE MANIFESTS, STAYS, MERGES, GETS DISSOLVED, LIBERATED, MANIFEST AND UNMANIFEST, REST IN ME.
  • THE SOURCE OF THE MANIFEST AND UNMANIFEST, PARAMASHIVA, HIS VERY EXPRESSION, PARAMASHAKTI, PARASHODASI, MAHASHODASI, BALA TRIPURASUNDARI, BHAIRAVI, BAHAMALINI, JAGADDHATRI, JAGAT JANANI, NIRVIKALPINI, NIRANJANI, NIJA ANANDAMAYI, NITHYANANDA SWAROOPIN,I IS HERE, MANIFESTING, AS NITHYANANDA, MY NIJA AVATARA, TO GIVE YOU ALL THE BOONS BLESSINGS, WAY FOR THE LIFE, ENLIGHTENMENT.
  • AS MY NIJA AVATARA NITHYANANDA, HERE I AM MANIFESTING.
  • OM OM OM
  • பிரபஞ்சப் பேரிருப்பின் பரமசிவப் பரம்பொருள், பரமசக்தியாய், பரமேஸ்வரனாய், நித்யானந்த வடிவம் தாங்கி, என் நிஜாவதாரமாய், பரஷோடசி, இங்கு, வரமளிக்க வழி காட்ட, நன்மையெலாம் தந்திட, தீயோர் அகற்றிட, தீமை ஒழித்திட, திடமுடன், நித்யானந்தனாய், என் நிஜவாதாரமாய், வந்துதித்தேன.
  • பரஷோடசி, பரமசக்தி, மீனாக்ஷி, நித்தியானந்த வடிவம் தாங்கி, நிஜாவதாரமாய் வந்திட்டேன்; நன்மைகள் தந்திட்டேன்.
  • தரிசனம் கண்டிட, வந்திருக்கும் அன்பர்கள் அனைவருக்கும், தருமார்த்த காம மோக்ஷம் மலர்ந்து, முக்திகள் நான்கும் நிறைந்து, வேதமும், ஆகமமும் சொன்ன, சத்தியங்கள் அனைத்தும், உங்கள் வாழ்வில், நிறைந்து இருந்திட, தந்தோம் நல்வரம்.
  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER FOR GUIDANCE ON HOW TO COMPLETE WITH ANCESTORS TO WHOM HE NORMALLY OFFERS SHRAADDHA EVERY NO MOON NIGHT, AS HE IS NOW IN ADI KAILASA AND HIS UNCLE SAID THAT HIS ANCESTORS WOULD HAVE FELT CHEATED COMING TO HIS DOORSTEP ON THAT DAY, DEVI REVEALED THUS:)

  • நன்றாய் புரிந்து கொள், உன் மூலம் உலகிற்கு, மரணமும், பித்ரு லோகமும் பற்றிய ரகசியங்கள் உரைக்கின்றேன்.
  • உனக்குள் இருக்கும், தசை நினைவு, சதை நினைவு, உயிர் நினைவு, உயிர் சக்தி, இவைகளுக்குள் தான், உன் பித்ருக்களின் எச்சமும் மிச்சமும் இருக்கின்றது.
  • உனக்குள் பூரணத்துவத்தை முழுமையாய் செய்து, பித்ருக்களோடு பூரண நிலையில் இருந்து, நீ இருந்த இடத்திருந்தே, பிண்ட தர்பணமும் பித்ரு தர்பணமும் செய். அதுவே, முறையான பிண்ட தர்பணம், முறையான பித்ரு தர்பணம்.
  • ஆதி கைலாசம், பித்ரு தர்பணம் செய்திட, முன்னோர்கள் சாந்தமடைந்திட, நூறு மடங்கு உகந்த இடம், உன் பழைய இருப்பு வீட்டை விட.
  • இருப்பு வீட்டு, பாசத்தை துறந்து, நீ இப்பொழுது இருக்கும் என் வீடான ஆதி கைலாசத்து, நேசத்தை வளர்த்துக்கொள்.
  • நல் வாழ்வு உனக்கும் அமையும், உன் முன்னோர்க்கும் அமையும்.
  • உனை மனக்குழப்பத்தில் ஆழ்த்தும், மாமனுக்கு சொல், நித்தியானந்தன் வந்துதித்த குலம், முன்னேழு பின்னேழு வடவேழு இடவேழு தலைமுறைக்கும், ஸ்ராத்தமும் பிண்டமும் தேவை இல்லை அடைந்தனர் முக்தி, நித்தியானந்தன் நிஜாவதார சக்தி சாந்நித்தியத்தினால்.
  • கவலையும் இல்லை, துக்கமும் இல்லை.
  • அத்துணை பேர்க்கும், அன்னை பரமசக்தி, அளித்தேன் முக்தி, அஞ்சவேண்டாம்.
  • ஓம் ஓம் ஓம்

(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYER: “AMMA PLEASE REMOVE THE PATTERN "STRUGGLING BADLY TO ACHIEVE THE GOAL/SUCCESS" FROM ME AND MY CHILDREN AND CURE OCD FROM ME AND MY CHILDREN”, DEVI REVEALED THUS:)

  • நன்றாய் கேட்டுக்கொள், உன் மூலம் உலகிற்கே சொல்லுகின்றேன்;
  • இறையனார் சொக்கநாதன் களவியல் நூலில் உரைத்த, சத்தியம் ஒன்றினை சொல்வதை கேட்டு, உனக்கும் உன் குழந்தைகளுக்கும், வாரிசுகள் அனைத்திற்கும் முறையாய்ச் சொல்லி, வழியைத் தேடி, வான் கயிலைக்கு வாருங்கள்.
  • குண்டலினி சக்தி, மூலாதாரத்துப் பொங்கையில், ஐந்து நிலைகளிலே, அவை மலர்ந்திடும்: காமுகம், காமசுகம், காமசிவம், காமேசம், காமபரம்.
  • காமுகம் என்பது, வலியையும் வேதனையையும் கூட சுகமாய் நினைத்து, தன்னையே அழிக்கும், மதுவையும் அசைவ உணவையும் கூட, ருசித்து, உடலை அழித்து, அதையும் சுகம் என நினைக்கும் மூடத்தன்மை காமுகம்.
  • காமசுகம்: உடலுக்கு அழிவில்லாது, மனதிற்கு அழிவில்லாது, இனிமையாய் ரசிக்கும் ருசிக்கும் சுகமெலாம் காமசுகம்.
  • காமசிவம்: காமம் கடந்து, வாழ்வின் நோக்கம் ஞானமே என்பதைப் புரிந்து, உணர்வும் மனமும் அதை நோக்கி இயங்குதல் காமசிவம்.
  • காமேசம்: காமசக்தி குண்டலினியாய் மலர்ந்து, உடலையும் மனதையும் கடந்து, ஞான சக்தியாய் வெளிப்பட்டு, தனக்கும் தரணிக்கும் நன்மை செய்யும் நிலை காமேசம்.
  • காமபரம்: அடைய வேண்டிய அருதியான நோக்கம் பரமசிவமே என்று புரிந்து, காமம் முழுவதும் பரமசிவம் மீது நின்று, பரமசிவமாய் மலர்ந்தருளல், காமபரம்.
  • நன்றாய் புரிந்து கொள், அடிநிலை உணர்வில், அடிபட்டு வாழ்வை அழித்திடாது. மேல்நிலை நோக்கி இயங்கத் துவங்கி, மேம்பட்டு, வான் கயிலைக்கு வந்திடு.
  • இதுவே, உன் வாழ்வுக்கும் வழி, உன் வாரிசுகள் வாழ்வுக்கும் வழி.
  • ஓம் ஓம் ஓம்

(IN RESPONSE TO A DEVOTEE WHO ASKED, ​”DEVI WHAT TAPAS CAN I DO TO RECEIVE YOUR LOVE?” DEVI REVEALED THUS:)

  • YOU ARE ASKING WHAT TAPAS YOU CAN DO TO RECEIVE MY LOVE.
  • GIVE, I AND MINE TO ME; I WILL GIVE I AND MINE OF ME TO YOU.

(IN RESPONSE TO A DEVOTEE WHO ASKED HOW TO GIVE BIRTH TO ENLIGHTENED CHILDREN, DEVI REVEALED THUS:)

  • காமம், கருத்தரித்தல், நல் ஞானக் குழந்தை பெறல், எனும், அறிவு அனைத்திற்கும் மூலமான ஆதிசக்தி நான் சொல்லுகின்றேன் கேள்.
  • காமம் எனும் பெரும் சக்தி, எழுவது சதவீதம், உயிர் சக்தியில் நிலைத்தது, இருபத்தைந்து சதவீதம், உயிர் நினைவில் நிறைந்தது, ஐந்து சதம் மட்டுமே, சதை நினைவிலும், உடல் உறவிலும் இருப்பது.
  • நன்றாய் இந்த சூக்ஷுமத்தைப் புரிந்து கொள்.
  • கருத்தரிக்கும் காலத்திற்கு முன்பாக, பெண் கருவேப்பிலை கொள்ள வேண்டும்;
  • கருவிலிருக்கும் வெப்பம் நீக்குவது கருவேப்பிலை, கரு-வெப்பம்-இலை, இதுவே கருவேப்பிலை.
  • பெண் கருவேப்பிலை அதிகம் உண்டு, கருத்தரிக்கத் தயாராக வேண்டும்;
  • ஆண் வேப்பிலை அதிகம் உண்ட,. கருத்தரிக்கக் தயாராக வேண்டும்.
  • ஆணின் உடலில் இருக்கும் வெப்பத்தை இலாமல் செய்வது வேப்பிலை;
  • ஆண் உடல் இருக்கும் வெப்பம் அழிந்து, அதற்குப் பின் கர்பாதானம் செய்வானே ஆனால், உலகம் வியக்கும் நல் ஞானக்குழந்தை பிறக்கும்; இல்லையேல், உன் மூட மனிதக் குழந்தைகளே பிறக்கும்.
  • நன்றாய் புரிந்துக்கொள்ளுங்கள், இது உலகனைத்திற்கும் நான் சொல்லும் உண்மை.
  • வேப்பிலை ஆணை மலடாக்கும் என்று சொல்வது, மூட மாய, மனித, மடத்தனத்தின் உச்சம்.
  • வேப்பிலையின் சக்தியிலிருந்தே இந்த ப்ரம்மாண்டத்தையும் உருவாக்கும், ஆதிசக்தி சொல்லுகின்றேன் கேளுங்கள்.
  • கர்பாதானம் செய்யும் காலத்திற்கு முன், ஆண் வேப்பிலை சாறுண்டு வாழ்ந்திட வேண்டும்; பெண் கருவேப்பிலை சாறுண்டு வாழ்ந்திட வேண்டும்.
  • இதனால், நிகழும் கர்பம், எண்ணிக்கை குறைவாய், சக்திபலத்தால் உயர்வாய், அமைந்து, உங்களுக்கும் உலகத்திற்கும், ஞானக் குழந்தைகள் பிறக்கும் சூக்ஷுமத்தை ஆதிசக்தி சொல்லுகின்றேன்.
  • சுகத்தோடு கேட்டு வாழ்ந்துகொள்ளுங்கள்.

Photos

FB-Photos-DEVI PARASHAKTI AKASHIK READING


FB-Photos-Flyer


Link to Facebook Page

https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/483258442756868
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/271878258055901
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/338649527627885
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/794346151227573
https://www.facebook.com/ParamahamsaNithyananda/videos/350285096518273